தமிழ் நாட்டார் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆய்வுகள்: ஒரு எடுத்துகாட்டு
சி clean up
வரிசை 1:
 
 
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
{{நாட்டுப்புற பாடல் வகைகள்}}
 
தமிழில் அமையும் [[நாட்டார் பாடல்|நாட்டார் பாடல்கள்]] '''தமிழ் நாட்டார் பாடல்கள்''' அல்லது '''தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்''' எனப்படுகின்றன.
 
தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலானவற்றை யார் எழுதினார்கள் என்று அறிதியிட்டுக் கூற முடியாது. காலம் காலமாக, வாய்மொழியாக, வாழ்கையின் பகுதியாக பாடப்பற்றனவே இந்தப் நாட்டுப்புறப் பாடல்கள். இன்றி எமக்கு எழுத்தில் கிடைப்பவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், அதற்குப் பின்பும் சில அறிஞர்களின் அயராத பணியால் ஆவணப்படுத்தப்பட்வை ஆகும். இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட பாடல்கள் தமிழ் நாட்டுப்புறப் பாடல்களின் ஒரு துளி என்றால் மிகையாகாது.
 
==ஆய்வுகள்==
தமிழ் நாட்டார் பாடல்களைப் பற்றி பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றுள் நா.வானமாமலை அவர்களின் ஆய்வு குறிப்பிடத்தக்கது. அவர் வட்டாரங்கள்வாரியாக தொகுத்த நாட்டார் பாடல்களை ''தமிழர் நாட்டுப் பாடல்கள்'' என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.
 
அவரது தொகுப்பில் நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்:<ref name="example">இப்பாடல் [[சேலம்]] மாவட்டம் மடகாசம்பட்டி என்ற இடத்திலிருந்து செல்வராஜூ என்பவரின் உதவியோடு கு.சின்னப்ப பாரதி சேகரித்தது. {{cite book
வரி 107 ⟶ 105:
* வேதாந்தப் பாடல்கள்
* ஆதிவாசிப் பாடல்கள்
* மங்களம்
 
'''மா. வரதராசன் வகைப்பாடு'''
வரி 134 ⟶ 132:
 
== இலக்கியத்தில் ==
[[தமிழ்|தமிழில்]] முதலில் எழுந்த இலக்கியமான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும். [[சங்ககால இலக்கியம்|சங்ககால இலக்கியமான]] [[ஐந்திணை]] தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மக்களிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம். சிலப்பதிகாரத்தில் வரும் [[கானல் வரி]], [[வேட்டுவ வரி]], [[குன்றக்குரவை]], [[ஆய்ச்சியர் குரவை]] என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்களின் வாழ்க்கைமுறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் இருக்கின்றன. [[இளங்கோ அடிகள்|இளங்கோவடிகளின்]] துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், [[யாழ்ப்பாண இசை|யாழ்ப்பாண இசை]] மரபில் வழங்கும் [[ஒப்பாரிப்பாடல்]]களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன. [[பெரியாழ்வார்]] [[கண்ணன்|கண்ணனை]] குழந்தையாக [[உருவகம்|உருவகப்படுத்திய]] [[தாலாட்டு]] [[தமிழ் நாடு|தமிழ் நாட்டு]]த் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.
 
நாட்டுப்பாடலில் ஈடுபாடு காட்டிய [[பாரதியார்]] தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்தியுள்ளார். (எ.கா) [[பாஞ்சாலி சபதம்]]. இவருக்கு முன்னதாக [[கோபாலகிருஷ்ண பாரதியார்]], [[வள்ளலார்|இராமலிங்க சுவாமிகள்]] முதலியோர் [[கும்மி]]யாட்டம் போன்றவற்றுக்கான நாட்டுப்பாடல்களை இயற்றியுள்ளனர். பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் [[வட்டார மொழி]] வழக்குகளே மிகுந்து காணப்படும். மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவை இயற்றப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், [[பண்பாடு]]ம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, [[தாது ஆண்டுப் பஞ்சம்|தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது]] [[தமிழர்]] [[திருமணம்]] முதலிய [[சடங்குகள்]] எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் நாட்டார் பாடல்களில் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நாட்டார்_பாடல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது