வெளியில் சென்றிருந்த மூத்த மகன் பரசுராமன் வந்ததும் தாயையும் தன் கட்டளையை நிறைவேற்றாத இளைய மகன்களையும் கொல்லும்படி கட்டளையிட்டார். ஏன், என்று கேள்வி கேட்காமல் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கேற்ப தாயையும் சகோதரர்களையும் வெட்டி கொன்றான். மகிழ்ந்த ஜமதக்கினி பரசுராமனை அழைத்து என் கட்டளையை எந்த கேள்வியும் கேட்காமல் நிறைவேற்றிய உனக்கு வேண்டியதை கேள் தருகிறேன் என்றார். மகிழ்ந்த பரசுராமன் தாயும் தம்பிகளும் வெட்டபட்டு மீண்டும் உயிர்ப்பித்த செய்தி தெரியாத வகையில் அவர்களை உயிர்ப்பித்து தர வேண்டினான். மகிழ்ந்த ஜமதக்கினி அவ்வாறே உயிர்ப்பித்து அருளினார்.
ஆனால்அக்கதையில் பிற்காலத்தில் அக்கதை திரிக்கப்பட்டு மாரியம்மன் தோற்றம் பற்றி கூறுவதாக அமைந்துள்ளது. இலக்கியம் எழுந்தபின் அதற்கு இலக்கணம் தோன்றியது போல் தமிழர்களால் வழிபாடு செய்து வந்த இறைவிக்கு பிறப்பு தோற்றம் பற்றி புராணம் எழுதலாயினர். அதுவும் பாகவதத்தில் உள்ள கதையை திரித்து கூறியுள்ளனர். அக்கதையில்சக்தி கற்பிழந்தஇழந்த ரேணுகாவை கொல்லும்படி சமதக்கினி தன் மூத்த மகன் பரசுராமனுக்கு கட்டளைஇட்டார். அவரும் ரேணுகாவை காட்டிற்கு அழைத்துதுரத்திச் சென்று கோடரியால் வெட்டி கொன்றான். சமதக்கினியின் கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன் தந்தையிடம் ஒரு வரம் வேண்டினான்.சமதக்கினியும் வரம் அளிப்பதாக கூறினார். இறந்த தன் தாயை உயிர்ப்பித்து தருமாறு வேண்டினான்.சமதக்கின கமண்டலத்தைக்கொடுத்து காட்டிற்குச் சென்று ரேணுகாவின் தலையை கழுத்துடன் வைத்து நீரைதெளித்தால் மீண்டெழுவாள் என்று கூறினார்.பரசுரானன் தன் தாயின் உடலைத்தேடி காட்டிற்குச்சென்றான் அங்கே தன் தாயின் தலை மட்டுமே கிடந்தது.உடலை காணவில்லை. உடலை காட்டுவிலங்குகள் இழுத்துச்சென்று விட்டன. பரசுராமன் தன் தாயின் உடலைத்தேடி காடெங்கும் அலைந்தான் கிடைக்கவில்லை.இவனுடைய தாயைப்போலவே கற்பிழந்த சக்கிலிப்பெண் ஒருத்தியை அவளுடைய கணவன் அக்காட்டில் வெட்டிப்போட்டிருந்தான். தன் தாயின் உடல் கிடைக்காமல் மனம் வருந்திய பரசுராமன் அச்சக்கிலிப்பெண்ணின் உடலோடு தன் தாயின் தலையை வைத்து கமண்டல நீரை தெளித்தான். தூக்கத்திலிருந்து எழுவதை போல ரேணுகாவின் தலையும் சக்கிலிப்பெண்ணின் உடலும் ஆக உயிர்த்தெழுந்தாள். ரேணுகா தெய்வ நிலைக்கு உயர்ந்தாள். உடல் மாறியதால் மாரியம்மன் ஆனதாக கதை செல்கிறது. இங்கு ஒன்றை கதை சொன்னவர்கள் மறந்து விட்டனர். மாறிய என்பதில் உள்ள றகரம் வல்லினம். மாரியம்மன் என்பதில் உள்ள ரகரம் இடையினம் இதிலிருந்தே கதை பின்னால் ஜோடிக்கப்பட்டது என்பதை அறியலாம்.
சக்கிலி இனத்தவர்கள் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்கள்.தெலுங்கை தாய் மொழியாக உடையவர்கள்.கி.பி 1529 ல் விஸ்வநாத நாயக்கர் மதுரையை ஆளும் பொறுப்பை விஜய நகர மன்னன் கிருஷ்ண தேவராயரிடம் பெற்றார்.அதன் பிறகு ஆந்திராவிலிருந்து மன்னனுக்கு அமைச்சராகவும் ,படை தளபதியகவும், படை வீரர்களாகவும் பலர் இங்கு வந்து குடியேறினர்.இன்றைய தமிழகத்தில் நாயுடுகள், ரெட்டியார்கள், தெலுங்கு நாயக்கர்கள், தெலுங்கு பிராமணர்கள், தெலுங்கு செட்டியார்கள், கம்பளத்தார்கள், போயர்கள், சக்கலியர்கள் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வந்தவர்கள். போயர்கள் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் வெட்ட பணிக்கப்பட்டனர். சக்கிலி இனத்தவர் மன்னனுக்கும், படை வீரர்களுக்கும் காலணி தைக்கும் பணியை மேற்கொண்டனர். சக்கிலியருக்கு அருந்ததியர் எனவும் அழைக்கப்படுகிறார்கள். தர்மபுரி பகுதியில் அதியமான் காலத்தில் வாழ்ந்த அதியர்களே அருந்ததியர்கள் என சிலர் கூறுகின்றனர். அக்கூற்று முற்றிலும் தவறானது. அதியர்கள் தமிழகத்தின் பூர்வீக குடிகள். தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள்.அருந்ததியர்கள் தெலுங்கை தாய்மொழி
யாக கொண்டவர்கள்.நாயக்க மன்னர்களின் ஆட்சியில் வைணவம் தழைத்தோங்கியது.சமஸ்கிருதம் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டன. பிராமணர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தனர். அவர்கள் மன்னரின் ஆதரவை பெற்றிருந்தனர். இந்நிலையில் வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்படாத மாரியம்மனின் வழிபாட்டை வெறுக்கலாயினர். மாரியம்மனின் வழிபாட்டை துடைத்தெறிய நினைத்தவர்கள் அக்காலத்தில் சமூகத்தில் கடைநிலையில் இருந்த சக்கிலி உடலை மாரியம்மன் பெற்றதாக கதை எழுதலாயினர்.ஆனால் மக்கள் மாரியம்மனை கைவிடவில்லை. மாறாக மாரியம்மனின் தலையோடு இணைந்த சக்கிலி பெண்ணின் உடலை நீக்கி வி தலையை மட்டும் வைத்து கழுத்து மாரியம்மன் என பெயரிட்டு வழிபடலாயினர்.
இதேபோல் மதுரைவீரனையும் சக்கிலி இனத்தவரோடு இணைத்து கதை எழுதியுள்ளதையும் காணலாம்.திருச்சியில் இருந்த மாரியம்மன் சிலையையும் அதனை மக்கள் வழிபடுவதை விரும்பாத ஜீயர் அச்சிலையை அப்புறபடுத்த ஆணையிட்டுள்ளார். அவருடைய ஆட்கள் அச்சிலையை வடக்கே எடுத்துச்சென்று கண்ணனூர் என்ற இடத்தில் வைத்துவிட்டு செண்று விட்டனர். ஆனால் உண்மையை மறைக்க அச்சிலையின் உக்கிரம் தாங்காமல் அப்புறப்படுத்த ஆணையிட்டதாக திரித்து கூறுகின்றனர். அங்கு மாரியம்மன் சிலை ஒன்று இருப்பதை கண்ட கண்ணனூர் மக்கள் வழிபட்டனர்.அக்கோயில் பிற்காலத்தில் சமயபுரம் மாரியம்மன் என புகழ்பெற்று விளங்குகிறது.