அசிசியின் பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "IglesiadeSanFrancisco-Salta-001.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கா... |
சி LanguageTool: typo fix |
||
வரிசை 29:
==வரலாற்று ஆதாரங்கள்==
புனித அசிசி பிரான்சிசின் வாழ்க்கை
பிரான்சிசு இறந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஏடுகள் தோன்றலாயின. அவரைப் பின்பற்றிய அவர்தம் சீடர்கள் பலர் அவரது வரலாற்றை எழுதினர். அவர்களுள் சகோதரர்கள் செலானோ தோமா, லியோ, ஆஞ்செலொ, ருஃபீனோ ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் பல பிரான்சிஸ்கன் துறவியர் பிரான்சிசோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அவரது போதனை, வாழ்க்கை நிகழ்வுகளையும் சேர்த்தனர்.
வரிசை 52:
</ref>.
பிரான்சிசு பிறந்தபோது அவர்தம் தந்தை பியேட்ரோ [[வாணிகம்|வணிக]]
பிரான்சிசின் தந்தை அசிசிக்குத் திரும்பியதும் இதையிட்டுக் கோபம் அடைந்தார். அவருக்குத் தனது மகன் ஒரு சமயத் தலைவராக இருப்பதில் விருப்பமில்லை. இதனால் அவர் தன்
==இளமைப் பருவம்==
வரிசை 73:
==பிரான்சிசு மனமாற்றம் அடைந்த வரலாறு==
1201ஆம் ஆண்டில் பெரூஜியா நகருக்கு எதிராகப் போரிடும்படி பிரான்சிசு படையில் சேர்ந்தார். காலெஸ்ட்ராடாவில் நடந்த போரில் எதிரிகளிடம் பிடிபட்ட இவர் ஓராண்டு [[கைதி]]யாக இருக்க நேரிட்டது<ref name="ODCC Francis">"Francis of Assisi." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005</ref>. இந்த அனுபவத்தில் இருந்தே
| last = Chesterton
| first = Gilbert Keith
வரிசை 86:
}}
</ref>.
1205ஆம் ஆண்டிலும் அவருக்கு ஓர் ஆன்மிக அனுபவம் கிடைத்ததாகத் தெரிகிறது.அதன்பின், பிரான்சிசு தம் பழைய வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கினார். விளையாட்டுகளும் விழாக்களும் அவருக்கு வெறுப்பையே ஊட்டின. அவருடைய முன்னாள் நண்பர்களை அவர் தவிர்க்கத் தொடங்கினார். அவர்கள், வேடிக்கையாக அவரைப் பார்த்து, "திருமணம் செய்துகொள்ளப் போகிறீரோ?" என்று கேட்டனர்.
==குரல் கேட்டல்==
பிரான்சிசின் வரலாற்றில் வருகின்ற ''பிச்சைக்காரனின் கதை''
1204 இல் பிரான்சிசு நோய் வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, தம் வாழ்க்கையின்
ஆனால் வழியில் அவர் நோய்வாய்ப்பட்டார். மேலும் ஒரு காட்சியில் ஒரு குரல் அவரை மீண்டும் அசிசி நகருக்குத் திரும்பிப் போகக் கூறியது. "நீ தலைவருக்கு (கடவுளுக்கு) வேலை செய்யவேண்டுமே ஒழிய, பணியாளருக்கு (உலக அதிகாரிகள்) அல்ல" என்று கூறிய அக்குரலைக் கேட்ட பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பிச் சென்றார். 1205ஆம் ஆண்டில் பிரான்சிசுக்கு இந்த ஆன்மிக அனுபவம் ஏற்பட்டது என்று அவரது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
வரிசை 100:
1206ஆம் ஆண்டில் ஒருநாள் பிரான்சிசு அசிசி நகர்ப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த [[புனித தமியானோ சிலுவை|புனித தமியானோ கோவிலுக்குள்]] நுழைந்து இறைவேண்டல் செய்யச் சென்றார். அக்கோவில் பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையில் இருந்தது. கோவிலின் உள்ளே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவம் சித்தரிக்கப்பட்ட ஒரு [[திருவோவியம்]] இருந்தது. அது பிசான்சிய-இத்தாலியக் கலைப் பாணியில் 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓவியம்.
கோவிலின் உள்ளே நுழைந்த பிரான்சிசு இயேசுவின் திருச்சிலுவைத் திருவோவியத்தின் முன் மண்டியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் ஏறிட்டு இயேசுவின் திருமுகத்தைப் பார்த்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்ததைக் கண்டார். இயேசுவின் உதடுகள் அசைவதுபோலத் தெரிந்தது. இயேசுவின் குரல்
{{cquote|பிரான்சிசு, என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா, எழுந்து சென்று அதைச் செப்பனிடு!}}
இச்சொற்களைக் கேட்ட பிரான்சிசுக்கு ஒரே அதிர்ச்சி. அக்குரல் எங்கிருந்து வந்தது என்று
புனித தமியானோ கோவிலில் பிரான்சிசுக்கு ஏற்பட்ட அனுபவம் அவரது இறையனுபவத்தின் ஓர் உச்சக்கட்டமாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. பிரான்சிசு தம் வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்குப் பணிபுரிவதிலேயே செலவழிக்கப் போவதாக உறுதிபூண்டார். முதலில் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவது பற்றித்தான் சிலுவையில் தொங்கிய இயேசு தம்மிடம்
முதலில் அவர் தம் வீட்டுக்கு விரைந்து சென்று, தம் தந்தையின் துணிக்கடையில் இருந்த விலையுயர்ந்த துணிகள் பலவற்றை எடுத்து மூட்டையாகக் கட்டி தம்
கோவில் குருவிடம் பணத்தைக் கொடுத்து, அக்கோவிலைச் செப்பனிடுமாறு கேட்டார். ஆனால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்ததும் குரு அதை வாங்க மறுத்துவிட்டார். பிரான்சிசு பணத்தை அங்கேயே போட்டுவிட்டு, தம் தந்தைக்கு அஞ்சி ஓரிடத்தில் போய் ஒளிந்து கொண்டார்.
வரிசை 113:
இதற்கிடையில், தம் மகன் துணிகளையும் குதிரையையும் விற்றதையும் அப்பணத்தைக் கோவில் குருவிடம் கொடுக்க முயன்றதையும் கேள்வியுற்ற பியேட்ரோ விரைந்து புனித தமியானோ கோவிலுக்கு வந்தார். அங்கு பிரான்சிசைத் தேடிப்பார்த்தும் காணாததால் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு ஒளிவிடத்திலிருந்து வெளியே வந்த பிரான்சிசு வீடு திரும்பினார். பசியால் வாடி மெலிந்துபோயிருந்த அவர் கந்தைத் துணிகளோடு தெருவில் நடந்து போனதைக் கண்ட சிறுவர்கள் சிலர் அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடியதோடு அவர்மீது கல்லெறிந்தனர். அவருடைய தந்தை பியேட்ரோ பெர்னார்டோனே பிரான்சிசை வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய், நையப்புடைத்து, அவரது கால்களில் சங்கிலியைக் கட்டி, அவரை ஓர் அறையில் அடைத்துப் போட்டார். பியேட்ரோ வீட்டில் இல்லாத நேரம்
==துறவற சபைகளை நிறுவுதல்==
வரிசை 127:
[[மூன்றாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட்]] விடுத்த அழைப்பை ஏற்று, பிரான்சிசு 1219 இல் சிலுவைப் போர் வீரர்களோடு சேர்ந்து எகிப்து செல்லப் பயணமானார். அங்கு [[இயேசு]] பிறந்து வளர்ந்து இறந்த [[திருநாடு|திருநாட்டை]] மீட்க போரிடும்போது இறக்க நேர்ந்தால் தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறக்கலாம் என்னும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. மேலும், கிறித்தவர்களும் இசுலாமியர்களும் நட்புடன் வாழ்வதற்குப் போர் தவிர வேறு வழிகள் உண்டு என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.
இதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை மிகப் பெரியதாக வளர்ந்தது. எனவே சபையை
==பிரான்சிசு ஒரு தொழுநோயாளரை அரவணைத்த நிகழ்ச்சி==
வரிசை 133:
உலகப் போக்கை விடுத்து, ஆன்மிக வாழ்வை மேற்கொள்ளத் துணிந்த பிரான்சிசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பல வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். அது பிரான்சிசு ஏழைகளிடமும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர்களிடமும் காட்டிய அன்பை எடுத்துரைக்கிறது.
ஒருநாள் பிரான்சிசு அசிசி பள்ளத்தாக்கில்
[[உரோமை]] நகருக்குத் திருப்பயணமாகச் சென்றபோது, அங்கு கோவில் படிகளில் அமர்ந்து ஏழைகளுக்காகப் பிச்சைகேட்டார். ஏழைகளோடு ஏழையாகத் தம்மையே இணைத்துக்கொண்டார்.
வரிசை 150:
{{cquote|இதுவரை நான் பியேட்ரோ பெர்னார்டோனே என்பவரை அப்பா என்று அழைத்து வந்தேன். இன்றிலிருந்து எனக்கு அப்பா 'வானகத்திலிருக்கும் நம் தந்தையே'}}
என்றுரைத்து, அனைவர் முன்னிலையிலும் நிர்வாணமாக நின்றார். அதைக் கண்ட ஆயர் குயிதோ தம் மேலாடையை
இந்த நிகழ்ச்சியை விமர்சித்த இத்தாலியக் கவிஞர் தாந்தே (''Dante'') கூறுவது போல, பிரான்சிசு "ஏழ்மை" என்னும் பெண்ணைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்று, தம் வாழ்வு முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டார்.
வரிசை 164:
==பிரான்சிசு இயேசுவின் சீடராகும் அழைத்தலை ஏற்றல்==
1208ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் புனித மத்தியா திருநாள். அன்று பிரான்சிசு வானதூதர்களின் அன்னை மரியா கோவிலில் திருப்பலியில்
{{cquote|இயேசு பன்னிரு திருத்தூதர்களையும் அனுப்பியபோது கூறியது: 'விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள்...பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம்...}}
வரிசை 181:
[[File:Giotto - Legend of St Francis - -06- - Dream of Innocent III.jpg|thumb|இடிந்து விழப்போன இலாத்தரன் கோவிலை பிரான்சிசு தாங்கிக் காப்பாற்றியதைக் கனவில் காணும் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட். ஓவியர் ஜோட்டோ என்பவரின் படைப்பாக இருக்கலாம்.]]
பிரான்சிசும் தோழர்களும் தெருத்தெருவாகச் சென்று இயேசுவின் போதனையைச் சாதாரண மக்களுக்கு அறிவித்தது அக்கால வழக்கத்துக்கு மாறாகவே இருந்தது<ref name = "EBO Francis"/>. தம் சிறு
எனவே, 1208 வசந்த காலத்தில் பிரான்சிசு தம் குழுவினரை அழைத்துக்கொண்டு [[உரோமை]] நகருக்குப் புறப்பட்டார். அங்கு [[மூன்றாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டை]] சந்தித்து, தாம் தொடங்கிய குழுவுக்கும், தமது பணிக்கும் திருத்தந்தை அங்கீகாரம்
இயேசு பிறந்து, வளர்ந்து, இறந்த நிலப்பகுதிகளை ([[திருநாடு]]) மீட்டெடுப்பதற்காக 1202-1204 ஆண்டுகளில் நான்காம் சிலுவைப் போர் நடந்திருந்தது. அது கிறித்தவர்களுக்குத் தோல்வியில் முடிந்தது. திருச்சபையில் சீர்திருத்தம்
இப்பின்னணியில்தான் பிரான்சிசு திருத்தந்தையைச் சந்தித்தார். அச்சந்திப்பு குறித்து பிரான்சிசின் வரலாற்றாளர்கள் சற்றே மாறுபட்ட தகவல்களைத் தருகின்றனர். உறுதியாகத் தெரிகின்ற தகவல்கள் இவை: திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் நடுக்காலத்தில் திருச்சபை உயர்ந்த நிலை அடைய வழிவகுத்தார். அதிகாரம் பெரும்பாலும் திருத்தந்தையை மையமாகக் கொண்டு அமைந்தது. இவரே முதன்முறையாக "கிறித்துவின் பதிலாள்" (Vicar of Christ) என்னும் அடைமொழியைத் திருத்தந்தைக்கு உரியதாகக் கொண்டார்.
வரிசை 191:
எளிய உடை உடுத்திக்கொண்டு திருத்தந்தையின் இலாத்தரன் அரண்மனைக்குச் சென்ற பிரான்சிசையும் தோழர்களையும் சந்திக்க திருத்தந்தை இன்னசெண்ட் மறுத்துவிட்டார் என்றும், இரவில் அவர் கண்ட கனவுக்குப் பின் அவர்களைச் சந்தித்தார் என்றும் ஒரு மரபு உள்ளது. கனவில் இலாத்தரன் பெருங்கோவில் இடிந்துவிழுவதுபோல் தோன்றியதாம். அது கீழே விழுந்துவிடாமல் ஓர் ஏழை மனிதர் தோள்கொடுத்து அதைத் தாங்கிக்கொண்டாராம். விழித்தெழுந்த திருத்தந்தை கனவின் பொருள் யாதென உணர்ந்தார். அதாவது, [[திருச்சபை]] அழிந்து போகாமல் காப்பதற்காகக் கடவுள் பிரான்சிசு என்னும் ஏழை மனிதரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரையும் அவர் தொடங்கிய இயக்கத்தையும் தடுப்பது சரியல்ல என்னும் உணர்வு திருத்தந்தையின் உள்ளத்தில் எழத்தொடங்கியது.
திருத்தந்தையின் ஆலோசகர்களாக இருந்த சில கர்தினால்கள் பிரான்சிசின் இயக்கத்தை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்று கருதினார்கள். பிரான்சு நாட்டின் தென்பகுதியில் லியோன் நகரில் இவ்வாறே ஏழ்மையை
ஆனால், பிரான்சிசு அத்தகைய குழப்பக்காரர் அல்லவென்றும், திருச்சபையின் ஒழுங்குமுறைகளை மதித்துச் செயல்படுவரே என்றும் பிரான்சிசின் ஆயர் குயிதோ எடுத்துக்கூறினார். அவரது நண்பர் புனித பவுலின் யோவான் (John of St. Paul) எனனும் கர்தினால் பிரான்சிசுக்காகப் பரிந்து பேசினார். ஏழ்மையைத் தழுவிய வாழ்வையே [[இயேசு]] கடைப்பிடித்தார்; அந்த வாழ்க்கைமுறையை ஏற்று, மக்கள் மனமாற்றம் அடைய வேண்டும் என்று போதிக்கவே பிரான்சிசும் அவர்தம் குழுவினரும் விரும்புகிறார்கள்; இதைத் தடைசெய்வது நற்செய்தியின் போதனைக்கு எதிராகப் போவதாகும் என்று அவர் திருத்தந்தைக்கு நினைவூட்டினார். இறுதியில் [[மூன்றாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட்]] பிரான்சிசு சமர்ப்பித்த ஒழுங்குமுறையை ஏற்பதாக வாக்களித்து, பிரான்சிசும் அவர்தம் குழுவினரும் மக்களிடையே சென்று கிறித்துவைப்
==சபையின் தோற்றம்==
பிரான்சிசும் தோழர்களும் அசிசிக்குத் திரும்பினார்கள். பிரான்சிசு தம் குழுவுக்கு "சிறிய சகோதரர்கள்" (Friars Minor) என்று பெயர் கொடுத்தார். இப்பெயரை அவர் தெரிந்துகொண்டதற்கு இரு வகையான விளக்கங்கள் உள்ளன. முதல் விளக்கத்தின்படி, அக்காலத்தில் நிலவிய வகுப்பு வேறுபாட்டின்
இத்தகைய வேறுபாடு நிலவிய சமூகத்தில் பிரான்சிசு தம் குழுவினர் "சிறியோர்"
மற்றொரு விளக்கப்படி, [[நற்செய்தி|நற்செய்தியில்]] இயேசு "சிறிய சகோதரர்கள்" பற்றிக் கூறுவதின் அடிப்படையில் பிரான்சிசு தம் குழுவுக்குப் பெயரிட்டார். [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு 25:40-45]] பகுதியில் உலக முடிவில் கடவுள் மனிதரைத் தீர்ப்பிடும்போது அவர்கள் "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுக்கு" எதைச் செய்தார்களோ அதைத் தமக்கே செய்ததாக மானிட மகன் கூறுவார் என்னும் கூற்றின் பின்னணியில் பிரான்சிசு தம் குழுவை "சிறிய சகோதரர்கள்" என்று அழைத்தார்.
உலகத்தில் துன்பத்தில் உழல்கின்ற எந்த மனிதரும் கடவுளின் சாயலாக இருப்பதால் அவர்களுக்கு நாம் உதவி செய்யும்போது அவர்களில் கடவுளையே
==பிரான்சிசின் முதல் துறவற இல்லம்==
அசிசிக்குத் திரும்பிய பிரான்சிசும் அவரது குழுவும் பாழடைந்த ஒரு குடிசையில் குடியேறினார்கள். ஆனால் அப்பகுதியில் வாழ்ந்த ஒரு வேளாண்மைத் தொழிலாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்தார்கள். 1211இல் அசிசிக்கு அருகே சுபாசியோ மலைப் பகுதியில் புனித பெனடிக்டு சபைத் துறவியர் "சிறுநிலம்" ("Portiuncula") என்று அழைக்கப்பட்ட "வானதூதர்களின் அன்னை மரியா" சிற்றாலயத்தை பிரான்சிசுக்குக் கொடுத்தார்கள். அச்சிறு கோவிலின் அருகே, களிமண், வைக்கோல், கம்புகள் ஆகியவற்றைக் கொண்டு சில குடிசைகளைக் கட்டி பிரான்சிசும் குழுவினரும் வாழ்ந்தார்கள். இவ்வாறு பிரான்சிஸ்கன் சபையின் தாய் இல்லம் உருவாயிற்று. அங்கிருந்து "சிறிய சகோதரர்கள்" இருவர் இருவராகப் புறப்பட்டுச் சென்று, மக்களுக்கு நற்செய்தி அறிவித்து, அவர்கள் மனமாற்றம் அடைந்து, அறவாழ்வு
தெருக்களில் சென்றபோது சிறிய சகோதரர்கள் மகிழ்ச்சியோடு கடவுளின் புகழைப் பாடிப் பரவினார்கள். பரந்து விரிந்த உலகம் அவர்களது துறவற இல்லமாக மாறியது. வைக்கோல் போர் வைக்கப்பட்ட களங்கள், குகைகள், கோவில் படி என்று பாராமல் கிடைத்த இடத்தில் இரவைக் கழித்தார்கள். வயல்களில் வேலைசெய்து அன்றாட உணவைப் பெற்றார்கள். சில சமயங்களில் மக்களிடம் பிச்சை கேட்டுப் பிழைப்பு நடத்தினார்கள்.
வரிசை 215:
==பிரான்சிஸ்கன் பெண்கள் சபை==
[[Image:SDamiano-Clara og søstre.jpg|thumb|left|புனித கிளாராவும் அவர்தம் சபைச் சகோதரிகளும். ஓவியம் காப்பிடம்: புனித தமியானோ கோவில், அசிசி.]]
1212ஆம் ஆண்டு,
பிரான்சிசு கிளாராவுக்கு முடிமழித்தல் செய்து, தவத்தின் அடையாளமான உடை அணிவித்து, அடைப்பிடம் (cloister) சார்ந்த ஏழ்மை வாழ்வுக்குப் புகுவித்தார்.<ref name="chest110"/>
வரிசை 223:
அச்சபையை [[புனித கிளாரா|அசிசி நகர் கிளாரா]], பிரான்சிசின் துணையோடு தொடங்கினார் எனலாம். "ஏழைப் பெண்கள் சபை" (Order of Poor Ladies) என்று முதலில் அழைக்கப்பட்ட அச்சபை பின்னர் "புனித தமியானோ சபை" என்றும், கிளாராவின் இறப்புக்குப் பின், அவர் புனிதராக அறிவிக்கப்பட்ட பிறகு "ஏழை கிளாரா சகோதரிகள் சபை" (Order of Poor Clares) என்றும் பெயர்பெற்றது.
==கிறித்தவத்தைப்
பிரான்சிசு பெற்ற இறையழைத்தலில் இரு முக்கிய கூறுகள் அடங்கியிருந்தன. முதல் கூறு "ஏழ்மை". இரண்டாவது கூறு "[[நற்செய்தி]] அறிவித்தல்." குடும்பத்தையும் உடைமைகளையும் துறந்த பிரான்சிசு [[இயேசு]] அறிவித்த நற்செய்தியைத் தாமும் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்பதில் கருத்தாயிருந்தார். அதே வேளையில் கிறித்துவுக்காகத் தம் உயிரையே பலியாக்கவும் அவர் முன்வந்தார்.
வரிசை 231:
1214-இல் பிரான்சிசு மீண்டும் ஒருமுறை நற்செய்திப் பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் வடகரையில் அமைந்துள்ள [[மொரோக்கோ]] நாட்டுக்குச் சென்று அங்கு இசுலாமியரிடையே [[கிறித்தவம்|கிறித்தவத்தைப்]] பரப்ப வேண்டும் என்னும் ஆர்வத்தில் பிரான்சிசு முதலில் எசுப்பானியா போய்ச் சேர்ந்தார். அங்கு கடின நோய்வாய்ப்பட்டதால் மொரோக்கோவுக்குப் பயணத்தைத் தொடர முடியவில்லை.
[[இத்தாலி|இத்தாலிக்குத்]]
கிபி 1215இல் [[மூன்றாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட்]] நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். அச்சங்கத்தில் பிரான்சிசு கலந்திருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. ஆயினும்
1216, சூலை மாதம் [[மூன்றாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட்]] பெரூஜியா நகரில் காலமானார். அப்போது பிரான்சிசு உடனிருந்தார்.
வரிசை 241:
அசிசி நகரில் அமைந்த "சிறுநிலம்" (Portiuncula) பகுதியில் பிரான்சிஸ்கு சபையின் முதல் பொது மன்றம் 1217 மே மாதம் நிகழ்ந்தது. சபையினர் பணியாற்ற வேண்டிய மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. டஸ்கனி, லொம்பார்டி, ப்ரோவென்சு, எசுப்பானியா, செருமனி ஆகிய ஐந்து மாநிலங்களில் பிரான்சிசின் ஐந்து தோழர்கள் நற்செய்திப் பணி ஆற்றச் செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. பிரான்சிசு அப்பணியைப் பிரான்சு நாட்டில் புரிய எண்ணம் கொண்டு பயணம் ஆனார். ஆனால் புளோரன்சு நகரில் அவர்தம் நண்பரும் சபைப் புரவலராகச் செயல்பட்டவருமான கர்தினால் ஊகோலீனோ (Cardinal Ugolino) பிரான்சிசு பிரான்சு நாடு செல்வதற்குப் பதிலாக இத்தாலியிலேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை நற்செய்தி அறிவித்த
1218இல் பிரான்சிசு இத்தாலியின் பல பகுதிகளில் நற்செய்தியைப் போதித்தார். பொது இடங்களிலும் கோவில் வெளிகளிலும், கோட்டை முற்றங்களிலும் அவர் போதித்தார். மக்கள் அவருடைய முன்மாதிரியால் கவர்ந்து இழுக்கப்பட்டனர். மக்கள் பேசிய வட்டார மொழியிலேயே பிரான்சிசு போதித்ததால் சாதரண மக்களும் அவர் கூறியதை ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர் சென்ற இடங்களில் கோவில் மணிகள் ஒலித்தன; குருக்களும் மக்களும் பவனியாகச் சென்று, பாட்டிசைத்து அவரை வரவேற்றனர்; நோயாளர்களை அவர்முன் கொண்டுவந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு மக்கள் கேட்டனர்; அவர்தம் காலடி பட்ட இடத்தை முத்திசெய்தனர்; அவரது மேலாடையிலிருந்து சிறு துண்டுகளை வெட்டி எடுக்க முயன்றவர்களும் உண்டு.
பிரான்சிசு நீண்ட உரைகள் ஆற்றவில்லை. மாறாக, [[இயேசு|இயேசுவின்]] நற்செய்தியை உருக்கமாக, மக்களின் இதயத்தைத் தொடும் வகையில், எளிய சொற்களைக் கொண்டு அறிவித்தார். அவர் சென்ற கமாரா என்னும் கிராமத்து மக்கள் அனைவரும், அவருடைய போதனையைக் கேட்டபின், அவரை அணுகி, தங்களை ஒரு
==பிரான்சிஸ்கு மூன்றாம் சபை உருவாதல்==
பிரான்சிஸ்கன் சபையில் ஆண்துறவிகளாகவோ, கிளாரா தொடங்கிய பெண்துறவியர் சபையில் உறுப்பினராகவோ சேராமல், குடும்ப உறவுகளைத் தக்கவைத்துக்கொண்டு, அதே நேரத்தில் நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கைமுறையைப் பின்பற்ற விரும்பிய
அக்குழுவில் சேர விரும்பியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் பிரான்சிசு வகுத்துக் கொடுத்தார். அவ்வொழுங்குகளின்படி, போர் ஆயுதங்கள் தாங்குவதும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதும் தடைசெய்யப்பட்டது.
வரிசை 255:
இச்சபையை பிரான்சிசு 1221இல் உருவாக்கினார்.
[[Image:SaintFrancisAssisiWithAlKamil15thCentury.JPG|thumb|பிரான்சிசு எகிப்திய சுல்தான் அல்-கமிலைச் சந்திக்கிறார் (1219). ஓவியம்: 15ஆம் நூற்றாண்டு.]]
==பிரான்சிசு எகிப்து
பிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி அவர் 1219ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் எகிப்து நாட்டு சுல்தான் அல்-கமில் என்பவரைப் போர்க்களத்தில் சந்தித்து, அவரிடம் போர் செய்வதைக் கைவிட்டு அமைதிக்காகப் பரிந்து பேசியது ஆகும்.
வரிசை 261:
இசுலாம் சமயத்தைத் தழுவியிருந்த சாரசீனியரோடு<ref name="சாரசீனியர்"/> போரிட்டு, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த [[திருநாடு|திருநாட்டை]] மீட்டெடுக்க கிறித்தவர்கள் ஐந்தாம் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போரைத்]] தொடங்க [[மூன்றாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட்]] தலைமையில் கூடிய நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம் தீர்மானித்தது.<ref>[http://en.wikipedia.org/wiki/Fourth_Lateran_Council நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம்]</ref>
சிலுவைப் போரில் பங்கேற்க பிரான்சிசு பதினொரு தோழர்களோடு புறப்பட்டார். அவர்களுள் சகோதரர் இல்லுமினாட்டோ, மற்றும் பீட்டர் கத்தானெயோ என்பவரும் அடங்குவர். அவர்கள் இத்தாலியின் அங்கோணா துறைமுகத்திலிருந்து புறப்பட்டனர். எகிப்தில் நைல் கரையில் அமைந்த டாமியேட்டா (''Damietta'') என்னும் நகர் முற்றுகையிடப்பட்டுக்
சுல்தான் அல்-கமில் பிரான்சிசை நன்மனதோடு வரவேற்றார். பிரான்சிசு
==பிரான்சிசு தாம் நிறுவிய சபையின் பொறுப்பைத் துறத்தல்==
சிலுவைப்
பிரான்சிசு எகிப்துக்குப் போயிருந்த காலத்தில் அவர் தொடங்கியிருந்த சபையில் பல சிக்கல்கள் எழுந்தன. அவர் பெயரால் சபையை நிர்வகித்தவர்கள் சபை உறுப்பினர் கடைப்பிடிக்க வேண்டிய ஏழ்மை வாழ்க்கையை மேலும் கடினமாக்க முயன்றனர். [[புனித கிளாரா]] சகோதரிகள் புனித பெனடிக்டின் ஒழுங்கு போன்ற வாழ்க்கைமுறையைத் தழுவ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். தொழுநோயாளர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கென்று ஒரு தனிப் பிரிவைத் தொடங்க கப்பேல்லா யோவான் (''John of Capella'') முயன்றார். சிலுவைப் போருக்குப் போன பிரான்சிசு இறந்துபோனார் என்னும் வதந்தியைச் சிலர் பரப்பலாயினர்.
இப்பின்னணியில் பிரான்சிசும் சகோதரர் எலியாவும் வெனிசுத் துறைமுகத்தில் வந்திறங்கிய செய்தி
சபையின் நிர்வாகப் பொறுப்பு அதிகரித்துக்கொண்டே போன நிலையில் பிரான்சிசு சபையின் பொதுத் தலைவர் பொறுப்பைத் துறந்தார்.<ref name = "EBO Francis"/> புதிதாகத் தலைமைப் பொறுப்பேற்ற பீட்டர் கத்தானெயோ ஓராண்டுக்குள் இறந்துவிடவே, 1221இல் சகோதரர் எலியா தலைவரானார். அவரே பிரான்சிசின் இறப்பு வரை பொறுப்பிலிருந்தவர்.
வரிசை 277:
==பிரான்சிசு கிறித்து பிறப்பைப் புதுமுறையில் கொண்டாடுதல்==
சபையின் தலைமைப் பொறுப்பைத்
1223ஆம் ஆண்டு கிறித்து பிறப்பு விழாவைப் புதிய முறையில் கொண்டாடத் தீர்மானித்தார் பிரான்சிசு. பாலஸ்தீனத்துக்குச் சென்ற பிரான்சிசு அங்கே இயேசு பிறந்த குகையைப் [[பெத்லகேம்|பெத்லகேமில்]] கண்டிருந்தார். இயேசு பிறந்த குகை, அங்கே மாட்டுத் தொழுவம், மாடு, கழுதை, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு தத்ரூபமாக ஒரு காட்சியை உருவாக்கி, இயேசுவின் பிறப்பைச் சிறப்பிக்க அவர் எண்ணினார். எனவே, உரோமையிலிருந்து அசிசிக்குப் போகும் வழியில் உள்ள கிரேச்சியோ (Greccio) என்னும் மலைப்பகுதி ஊரில் ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து அதை வைக்கோலால் நிரப்பினார் பிரான்சிசு. அப்பகுதியில் பிரான்சிஸ்கு சபை சகோதரர்கள் தங்கிப் பணிபுரிய இடம் கொடுத்தவர் யோவான் வெல்லீட்டா என்னும் புரவலர். பிரான்சிசின் வேண்டுகோளுக்கு இணங்க வெல்லீட்டா அக்குகையில் ஒரு தொழுவத்தை உருவாக்கினார். ஒரு மாடும் கழுதையும் கொண்டுவரப்பட்டன.
செய்தியறிந்த ஊர் மக்கள் தீவட்டிகளை ஏந்தி, குகையில் வந்துகூடினர். நள்ளிரவில் அக்குகையில் கிறித்து பிறப்பு விழாத் திருப்பலி கொண்டாடப்பட்டது. பிரான்சிசு இயேசு பிறப்பு பற்றிய நற்செய்தியை வாசித்து மறையுரை ஆற்றினார். மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை எடுத்து அன்போடு முத்தி செய்தார். அப்போது அச்சொரூபம் உயிருள்ள ஒரு
கிறித்து பிறப்பு விழாவைக் கொண்டாட இன்று உலகெங்கும் குடில் கட்டப்படும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கத்தைப் பரப்பியதில் பிரான்சிசு பெரும்பங்காற்றினார்.<ref>[http://en.wikipedia.org/wiki/Christmas_crib கிறித்து பிறப்பு விழாக் குடில்]</ref>
வரிசை 289:
1224ஆம் ஆண்டு ஆகத்து மாதத் தொடக்கத்தில் பிரான்சிசு மற்றும் மூன்று சகோதரர்களோடு டைபர் ஆற்றுக்கும் ஆர்ணோ ஆற்றுக்கும் இடையிலான ஒரு மலைப்பகுதியில் லா வேர்னா (''La Verna'', இலத்தீனில் ''Alverna'') என்னும் இடத்துக்குச் சென்றார். அங்கு புனித மிக்கேல் விழாவுக்கு (செப்டம்பர் 29) முன்னால் நாற்பது நாள்கள் நோன்பிருக்கும்படி அப்பயணத்தை மேற்கொண்டார்.
லா வேர்னாவில் தியானத்தில்
அப்போது பிரான்சிசின் கூடவே இருந்த சகோதரர் லியோ அந்நிகழ்ச்சி குறித்துத் தெளிவான, சுருக்கமான குறிப்பை விட்டுச் சென்றுள்ளார். அக்குறிப்பு எழுதப்பட்டுள்ள தோல் ஏட்டின் (''parchment'') பின்புறத்தில் பிரான்சிசு தம் கையால் எழுதிய ஆசி உள்ளது.<ref>[http://www.sacred-texts.com/chr/wosf/wosf21.htm பிரான்சிசு தம் கையால் தோல் ஏட்டில் எழுதிய ஆசியுரை.]</ref> சகோதரர் லியோ எழுதிய குறிப்பு:
வரிசை 295:
{{cquote|ஆண்டவரின் கை பிரான்சிசின் மேல் வைக்கப்பட்டது. ஒரு வானதூதர் காட்சியில் தோன்றி பிரான்சிசிடம் பேசினார். அப்போது பிரான்சிசின் உடல்மீது இயேசுவின் திருக்காயங்களை வானதூதர் பதித்தார். அதன் பின் பிரான்சிசு இத்தோல் ஏட்டின் மறுபுறத்தில் இறைபுகழைத் தம் சொந்தக் கையால் எழுதினார். தம்மீது கடவுள் பொழிந்த எல்லா நன்மைகளுக்கும் அவர் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்.}}
பிரான்சிசு பெற்ற இயேசுவின் ஐந்து
விலாவில் இருந்த காயம் ஒரு ஈட்டியால் ஏற்பட்ட
பிறருடைய வேதனையைக் கண்டு எப்போதும் இரக்கம் கொண்ட பிரான்சிசு தம் உடலை ஒறுப்பதில் ஒருபோதும் தயங்கவில்லை. "சகோதரன் கழுதை" (''Brother Ass'') என்றுதான் அவர் தம் உடலுக்குப் பெயர் வைத்திருந்தார்.
==பிரான்சிசு இயற்றிய "கதிரவன் கவிதை" (Canticle of the Sun)==
[[Image:Giotto - Legend of St Francis - -15- - Sermon to the Birds.jpg|thumb| இயற்கையோடு இணைந்து இறைபுகழ் போற்றும் பிரான்சிசு பறவைகளுக்கு போதிக்கின்றார். ஓவியர்: ஜோட்டோ. காலம்: 1267-1337. காப்பிடம்: அசிசி.]]
உடலின் துன்பம் மிகுந்த வேளையில் பிரான்சிசு கடைசி
அக்கவிதையில் பிரான்சிசு கடவுளின் புகழைப் பாடுகின்றார். கடவுள் படைத்த சூரியனை "சகோதரன்" என்றும் சந்திரனை "சகோதரி" என்றும் அழைக்கின்றார்.
இத்தாலிய (இலத்தீன்) மொழியில் சூரியன் ஆண்பால், சந்திரன்
பிரான்சிசு உருவாக்கிய கவிதையின் சுருக்கம்:
"
"சகோதரன் காற்றும் சகோதரி பூமியும், சகோதரன் நெருப்பும் சகோதரி தண்ணீரும் தம்மைப் படைத்த கடவுளை வாழ்த்துகின்றனர்."
வரிசை 319:
==பிரான்சிசின் இறுதி சாசனம்==
பிரான்சிசின் கண்பார்வை மிகவும் மோசமானது. சிகிச்சையும் பயனளிக்கவில்லை. 1225-1226
இவ்வுலகில் ஆற்றுவதற்காகக் கடவுள் தமக்கு அளித்த பணி நிறைவுறும் வேளையில், சபைச் சகோதரர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணியைப் பொறுப்போடு ஆற்ற வேண்டும் என்று கேட்கிறார்.
வரிசை 333:
ஏழ்மையைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட பிரான்சிசு தமக்கென்று தாம் உடுத்த எளிய மேலாடையைக் கூட வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தம் ஆடையை அகற்றச் சொன்னார். பின்னர் தரையில் தம்மைக் கிடத்தச் சொன்னார். கடன் வாங்கிய ஒரு துணியால் அவரது உடலை மறைத்தனர். அனைத்தையும் துறந்த மனிதராக, ஏழையாக இவ்வுலகை விட்டுப் பிரிய விரும்பினார் பிரான்சிசு.
பின்னர் பிரான்சிசு தம் சகோதரர்களிடம் [[யோவான் நற்செய்தி|யோவான் நற்செய்தியிலிருந்து]] இயேசுவின் இறுதி இராவுணவு, துன்பங்கள் மற்றும் பிரியாவிடை பற்றிய பகுதியை (யோவான் 13:1-17) வாசிக்கச் சொன்னார். நற்செய்தி வாசகத்தைக் கவனமாகக்
பிரான்சிசு இறந்த இரண்டே ஆண்டுகளில் அவர்தம் நெருங்கிய நண்பராயிருந்த [[ஒன்பதாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி]] இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார் (சூலை 16, 1228)<ref>[http://www.radiovaticana.org/in3/Articolo.asp?c=321732 இன்றைய புனிதர்: அசிசியின் புனித பிரான்சிஸ்], வத்திக்கான் வானொலி</ref>. இன்று, புனித அசிசி பிரான்சிசு உலகெங்கிலும் போற்றப்படுகின்ற சமயத் தலைவர்களுள் சிறப்பிடம் பெறும் ஒருவராகத் திகழ்கின்றார்<ref name = "EBO Francis"/>.
வரிசை 345:
பிரான்சிசு இறந்து இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னரே அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பட்டத்தை அளித்தவர் [[ஒன்பதாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி]] ஆவார். அவர் கர்தினாலாக இருக்கும்போதே பிரான்சிசின் நெருங்கிய நண்பராக இருந்ததோடு, பிரான்சிஸ்கு சபையின் மேற்பார்வையாளராகவும் செயல்பட்டார்.
1228, அக்டோபர் 16ஆம் நாள் பிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அதற்கு ஓராண்டுக்கு முன்னரே, பிரான்சிசுக்கு வணக்கம் செலுத்துவதற்காக ஒரு பெரிய கோவில் கட்டப்போவதாகவும்,
1228இல் தொடங்கிய கோவில் கட்டடம் 1253இல் நிறைவுபெற்று, கோவில் அர்ச்சிக்கப்பட்டு, அசிசியின் புனித பிரான்சிசுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
வரிசை 365:
புனித பிரான்சிசு கடந்த எட்டு நூற்றாண்டுகளாக எல்லாச் சமயங்களையும் சார்ந்த மக்களுக்கும், சமய நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கிவந்துள்ளார். அதற்கான காரணங்கள் கீழ்வருவன:
*பிரான்சிசு தாம் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக மதிப்பீடுகளைக் கேள்விக்கு உட்படுத்தி, ஒரு புதிய வாழ்க்கை முறையை நடைமுறையில் காட்டினார். செல்வமும் புகழும் வீர சாகசமும் மதிக்கப்பட்ட சமூகத்தில் அவர் வறுமையையும் ஏழ்மையையும் தம் வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். போரும் வன்முறையும் பகைமையை வளர்க்கும் கருவிகள் என்று உணர்ந்த அவர், தம் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தபிறகும், அமைதியின் தூதுவராக எகிப்திய சுல்தானைச் சென்று சந்தித்தார்.
*உலக
*பிரான்சிசு இயற்கையில் இறைவனைக் கண்டார். உலகமும் உலகில் உள்ள நீர், காற்று, மண், நெருப்பு மற்றும் இயற்கை வளங்களும், மரஞ்செடிகொடிகளும் பறவைகளும் விலங்கினங்களும் அன்புக் கடவுளின் படைப்புகள். அவற்றை மனிதர் சுரண்டாமலும் அழிக்காமலும் அனைவரின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது பிரான்சிசின் செய்தி. இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வளர்ந்துவரும் நம் காலத்தவர்க்கு உகந்த ஒன்று.
*தொழுநோயாளர் ஒருவரைத் தழுவி அணைத்து முத்தமிட்ட பிரான்சிசு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர் யாராயினும் அவர்களிடத்தில் இறைவனின் சாயலைக் காண்பதின் தேவையை இன்றைய உலகுக்கு உணர்த்துகிறார்.
வரிசை 371:
வரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு திருத்தந்தை [[திருத்தந்தை பிரான்சிசு|"பிரான்சிசு"]] என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார். 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற அர்செந்தீனிய நாட்டவரான பெர்கோலியோ, பிரான்சிசு என்னும் பெயரைத் தம் பெயராக ஏற்று, புனித பிரான்சிசைப் போன்று எளிய வாழ்வை மேற்கொண்டு, திருச்சபையும் ஏழ்மையைத் தழுவி ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்.
[[திருத்தந்தை பிரான்சிசு]] தமது பெயர்கொண்ட புனிதரான அசிசியின் பிரான்சிசு பிறந்து, வளர்ந்து, பணி செய்து, இறந்த இடமாகிய [[அசிசி]] நகருக்கு, அப்புனிதரின் திருவிழாவான அக்டோபர் 4ஆம் நாள் திருப்பயணமாகச் சென்றார். அங்கு, திருத்தந்தை தம் புனிதரின் வாழ்வோடு தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று,
புனித பிரான்சிசு தொழுநோயாளர் ஒருவரை அரவணைத்தது போன்று திருத்தந்தை பிரான்சிசும் உடல்-உள ஊனமுற்ற இளையோரை சந்தித்து, ஒருவர் ஒருவராகக் கட்டித் தழுவி, ஆசி வழங்கினார். கத்தோலிக்க அறநிலையம் நடத்துகின்ற ஏழையர் உணவகம் சென்று, அங்கு ஏழைகளோடு அமர்ந்து திருத்தந்தை உணவு உட்கொண்டார். பின்னர், புனித பிரான்சிசு தாம் உடுத்தியிருந்த ஆடையைகூட கழற்றிக் கொடுத்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல முடிவெடுத்த இடத்தில் திருத்தந்தை உரையாற்றியபோது, புனித பிரான்சிசைப் போன்று திருச்சபையும் ஏழ்மையைக் கடைப்பிடித்து, ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
|