முந்நீர் (சொல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
'''முந்நீர்''' என்னும் சொல் கடலைக் குறிக்கும்.
:வளி இடை வழங்கா வானம் சூடிய
:மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
:முரசு முழங்கு தானை மூவர் - புறநானூறு 35</ref> கடலில் பொழிந்து கடல் வளத்தைப் பெருக்கும் மழைநீர், ஆறு அடித்துக்கொண்டு வரும் மழைநீர், மண்ணிருந்து ஊறிவரும் ஊற்றுநீர் ஆகிய மூன்று நீரும் கலந்தது என்னும் கருத்துடன் முந்நீர் என்னும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது.
== முந்நீர் சொல்லாட்சி ==
முந்நீர் என்னும் சொல்லைக் கையாண்டு சங்கநூல் பாடல்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இங்குத் தொகுப்பாக வைக்கப்படுகின்றன. முந்நீர் என்னும் சொல் கடலைக் குறிக்கும்.
;இரண்டு வகை
*பருக முடியாத கடல் முந்நீர், பருகும் முந்நீர் இரண்டும் வெவ்வேறு.
;உப்பு-அமிழ்தம்
*முந்நீர் தரும் உப்பை அமிழ்தம் என்பர்.
;தன்மை
*முந்நீர் குளிர்திருக்கும்.
*முந்நீரின் ஆழம் அளக்க முடியாதது.
*முந்நீர் நீர்மட்டத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை.
;முந்நீரில் செல்லல்
*முந்நீரில் செல்லத் திமிலும் <ref>கரை பொரு முந்நீர்த் திமில் புறநானூறு 303</ref> நாயாய்க் கப்பல்களும் <ref>முந்நீர் வழங்கும் நாவாய் புறநானூறு 13</ref> கலன்-கப்பல்களும் <ref>நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் கலித்தொகை 5</ref> பயன்படுத்தப்பட்டன.
*முந்நீரில் செல்வோர் மகளிருடன் செல்வதில்லை. முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை <ref>தொல்காப்பியம் 3-37-1</ref>
;வழிபாடு
*முந்நீரில் தோன்றும் சுடரை மக்கள் வழிபடுவர்.
*திருமால் முந்நீர் வண்ணம் கொண்டவன்.
;செம்மை
*அரசன் குடிமக்களுக்கு நீதி வழங்கும்போது முந்நீரின் நடுவில் தோன்றும் ஞாயிறு போல் விளங்குவான்.
*நெடுஞ்செழியன் அவ்வாறு முறை வழங்கினான்.
;விழா
*பாண்டிய அரசன் நெடியான் முந்நீர் விழாக் கொண்டாடினான்.
*வைகை நீராட்டு விழா முந்நீர் விழா போல இருந்தது.
;முழக்கம்
*மதுரையில் முரசு முழங்கும் ஒலி முந்நீர் முழக்கம் போல இருந்தது.
;பயன்பாடு
*முந்நீரில் செல்ல உதவுவது காற்று.
*முந்நீரில் செல்லும் கப்பல்களைக் காற்று கவிழ்க்கும்.
*முந்நீரில் இரவில் செல்வோர் விளக்குச் சுடருடன் செல்வர்.
*குட்டுவன் … முந்நீர் முற்றி … பௌவம் நீங்க ஓட்டிய எஃகம் <ref>அகநானூறு 212</ref>
*சேரலாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமையத்து … வணங்குவில் பொறித்தான்.
*மூவேந்தரும் முந்நீரை ஏணி போல் பயன்படுத்தி வாணிகம் செய்து முன்னேறினர்.
== காதலி கூறுகிறாள் ==
*திரை தரும் முந்நீர் வளாகம் எல்லாம் – ஞாயிறே, தேடு என்றேன்.
*முந்நீர் வெறும் மணலாக இறைப்பேன் … காற்றே! - கதிரே! – என் நலன் உண்டு துறந்தானைக் காட்டாயேல் <ref>கலித்தொகை 144</ref>
== விளக்கத் தொடர்கள் - நிலம் ==
*இருள் நிற முந்நீர் வளைஇய உலகம் <ref>திருமுருகாற்றுப்படை 293</ref>
*மாசு இல் வான் பரந்த முந்நீர்த் தொன்னிலம் <ref>கலித்தொகை 103</ref>
*விரிதிரை முந்நீர் மண்திணிக் கிடக்கை <ref>அகநானூறு 379</ref>
*முழங்கு இரு முந்நீர்த் திரை <ref>அகநானூறு 338</ref>
*முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா - குதிரை நடைக்கு <ref>அகநானூறு 104</ref>
*முந்நீர் உடுத்த வியன் உலகு <ref>புறநானூறு 382</ref>
*முந்நீர் வரைப்பகம் <ref>புறநானூறு 363</ref>
*வெண்திரை முந்நீர் வளைஇய உலகம் <ref>பதிற்றுப்பத்து 31</ref>
வரி 52 ⟶ 51:
*திரை பொரு முந்நீர்க் கடல் <ref>புறநானூறு 154</ref>
== விளக்கத் தொடர்கள் – கடல் ==
*முழங்கு முந்நீர் … ஞாலம் <ref>புறநானூறு 18</ref>
*இரு முந்நீர் … பௌவம் <ref>மதுரைக்காஞ்சி 75, 235,</ref>
*ஒலி முந்நீர் <ref>மதுரைக்காஞ்சி 2</ref>
*இரங்கும் முந்நீர் … ஊர் <ref>அகநானூறு 400</ref>
== மேற்கோள் குறிப்பு ==
{{Reflist}}
|