முருதீசுவரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கர்நாடகாவில் உள்ள பட்டணம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

01:43, 20 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

முருதீசுவர் என்பது கருநாடகத்தின் வட கன்னட மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும், இந்நகரம் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது, முருதீசுவர் என்பது இறைவன் சிவனின் இன்னொரு பெயராகும். இந்நகரத்தில் உள்ள முருதீசவரன் கோவில் புகழ்பெற்றது. மங்களூரு-மும்பை கொங்கன் தொடருந்துபாதையில் முருதீசுவர் என்ற பெயரில் இங்கு தொடருந்து நிலையம் உள்ளது [1].

முருகதீசுவர்
ಮುರುಡೇಶ್ವರ
Skyline of முருகதீசுவர்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்வட கன்னட மாவட்டம்
மொழி
 • Officialகன்னடம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்581 350
Telephone code08385
வாகனப் பதிவுKA-47

தொன்மம்

முருகதீசுவரத்தில் உள்ள சிவனின் சிலை

இப்பெயர் இராமாயண காலத்திலிருந்து வழங்கப்படுவதாக தெரிகிறது.

முருகதீசுவரன் கோவிலும் அதன் இராசகோபுரமும்

இக்கோவில் கன்டுக்க மலையில் மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. இதன் கோபுரம் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது. அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். மலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் படிகட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராசகோபுரத்தின் உயரம் 237.5 அடி ஆகும். இது உயரமான கோபுரங்களில் ஒன்று. இக்கோவிலை புதுபித்து அதன் இராசகோபுரத்தையும் கட்டியவர் இராம நாகப்ப செட்டி.

கருவறை தவிர இக்கோவிலின் அனைத்துப்பகுதிகளும் புணரைமைக்கப்பட்டதாகும் (புதிதாக கட்டப்பட்டதாகும்).


சிவனின் சிலை

-மேற்கோள்கள்=

"https://ta.wikipedia.org/w/index.php?title=முருதீசுவரா&oldid=1742808" இலிருந்து மீள்விக்கப்பட்டது