'''இரண்டாம் இராஜராஜ சோழன்''' [[குலோத்துங்க சோழன் II|இரண்டாம் குலோத்துங்கனின்]] மகனாவான். இரண்டாம் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில்[[கல்வெட்டு]]க்களில் காணப்படும் கடைசி ஆட்சி ஆண்டு 16 வது அல்லது 17 வது ஆண்டு. அவனுடைய ஆட்சி கி.பி 1150 அளவில் முடிவடைந்ததாக இதிலிருந்து தெரிகிறது. இந்தக் காலத்திற்கு நான்கு ஆண்டுகள் முன்பு அவன், தன் மகனான இரண்டாம் இராஜராஜனை நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்புபடுத்தினான். பரகேசரி இராஜராஜனுடைய கல்வெட்டுகளில் அவனுடைய ஆட்சி ஆண்டுகள் கி.பி 1146ல் ஏப்ரல் 6ம் தேதிக்குப் பிறகு ஒரு தேதியிலிருந்து கணக்கிடப்படுகின்றன.