யாழ்ப்பாணக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Template removed
வரிசை 33:
 
== போத்துக்கீசர் காலம் ==
[[யாழ்ப்பாண அரசு]] [[1619]] இல் [[போர்த்துக்கல்|போத்துக்கீசரின்]] நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை [[நல்லூர்|நல்லூரி]]லிருந்து அவர்கள் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண]]த்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு [[கோட்டை]]யையும் கட்டினர். 1619 [[ஆகஸ்ட்]] மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள [[கோவா]]விலிருந்த தலைமையகத்திலிருந்து [[பிலிப்பே டி ஒலிவேரா]]வுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை [[1625]] ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. [[1629]] இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், [[1637]] இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]த் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், [[வைத்தியசாலை]]யொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன.<ref>Ribeiro, Joao., The Histiric Tragedy of the Island of Ceilao (Translated from Portuguese by P. E. Pieris), Asian Educational Services, New Delhi, 1999 (First Published 1909), p. 2013.</ref> போத்துக்கீசரின் [[யாழ்ப்பாண நகரம்]] (போர்த்துக்கேயர் குடியேற்றம்) கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.<ref>Antonio Bocarro’s Description of Ceylon (Translated into English by T. B. H. Abeyasinghe), The Journal of the Royal Asiatic Society of Sri Lanka, New Series, Vol XXXIX, Special Number, 1999. pp. 56, 57 </ref>
 
== ஒல்லாந்தர் காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணக்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது