மிர்சு அல்-கபீர் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 25 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: clean up, replaced: {{வார்ப்புரு: → {{
 
வரிசை 4:
|image=[[Image:Croiseur_de_bataille_Strasbourg_03-07-1940jpg.jpg|300px|]]
|caption=தீப்பற்றி எரியும் பிரெஞ்சு போர்க்கப்பல் ''ஸ்ட்ராஸ்பர்க்''
|partof=[[நடுநிலக் கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களம் (இரண்டாம் உலகப் போர்) |நடுநிலக் கடல் களத்தின்]]
|date=ஜூலை 3, 1940
|place=மெர்சு-எல்-கேபிர், [[அல்ஜீரியா]]
வரிசை 17:
|casualties2=1 போர்க்கப்பல் மூழ்கடிப்பு,<br> 2 போர்க்கப்பல்கள் சேதம்<br>3 டெஸ்டிராயர்கள் சேதம்<br>1 டெஸ்டிராயர் தரை தட்டியது<br/>1,297 மாண்டவர்,<br>350 காயமடைந்தவர்
}}
{{வார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் வடக்கு ஆப்பிரிக்கா}}
'''மிர்சு அல்-கபீர் சண்டை''' (''Attack on Mers-el-Kébir'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை|வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில்]] நிகழ்ந்த ஒரு கடற்படைச் சண்டை. [[நடுநிலக்கடல்|நடுநிலக்கடலில்]] நடந்த இச்சண்டையில் [[அல்ஜீரியா|அல்ஜீரிய]]க் கடற்கரையோரமாக இருந்த பிரஞ்சு கடற்படையை பிரிட்டானியக் கடற்படை கப்பல்கள் தாக்கி அழித்தன.
 
வரிசை 24:
[[அல்ஜீரியா]] பிரான்சின் காலனிகளில் ஒன்று. அங்கு ஒரு பெரும் பிரெஞ்சு கடற்படை நிறுத்தப்பட்டிருந்தது. அதன் தளபதி அட்மைரல் ஃபிரான்சுவா டார்லான் உடனடியாக தன் படைகளை நாடு கடந்த பிரஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்காமல் இழுத்தடித்தார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த போர்க் கப்பல்கள் நாசி ஆதரவு பிரெஞ்சு அரசின் கையில் சிக்காமல் இருக்க அவற்றைத் தாக்கி அழிக்க பிரித்தானியத் தலைவர்கள் முடிவு செய்தனர். போர்க்கப்பல்களைச் சரணடைய பிரித்தானியா விதித்த இறுதிக் கெடு கடந்த பின்னர், பிரித்தானியக் கடற்படை தன் தாக்குதலைத் தொடங்கியது. ஜூலை 3, 1940 அன்று மாலை அல்ஜீரியாவின் மெர்சு எல் கேபிர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சுக் கப்பல்கள் மீது பிரிட்டானியக் கடற்படை குண்டு வீசத் தொடங்கியது. இத்தாக்குதலை எதிர்பாராத பிரஞ்சுப் போர்க்கப்பல்கள் பெரும் சேதமடைந்தன. துறைமுகத்திலிருந்து தப்ப முயன்ற கப்பல்கள் மீது பிரித்தானிய விமானங்கள் குண்டு வீசின. இத்தாக்குதல் மேலும் சில நாட்கள் நீடித்தது. மெர்சு எல் கேபிரிலிருந்து தப்பிய பிரெஞ்சு கப்பல்களை பிரித்தானியக் கப்பல்கள் விடாது துரத்தின. பிரிட்டானிய நீர்மூழ்கிக் கப்பல்களும் இத்தாக்குதலில் ஈடுபட்டன. இத்தாக்குதலில் மெர்சு எல் கேபிரிலிருந்த பெரும்பாலான கப்பல்கள் சேதமடைந்தன, சில மூழ்கடிக்கப்பட்டன. ஒரு சில மட்டும் தப்பி நாசிக் கட்டுப்பாட்டு பிரான்சை அடைந்தன. இத்தாக்குதலில் 1297 பிரெஞ்சு மாலுமிகள் கொல்லப்பட்டனர் 350 பேர் காயமடைந்தனர்.
 
பிரித்தானியப் படைகள் நேச நாடுகளுள் ஒன்றான பிரான்சின் படைகள் மீதே நடத்திய இத்தாக்குதல் [[சார்லஸ் டி கோல்]] தலைமையிலான விடுதலை பிரான்சு அரசுக்கும் [[வின்ஸ்டன் சர்ச்சில்]] தலைமையிலான பிரித்தானிய அரசுக்கும் இடையே சில மாதங்களுக்கு கடும் உரசலை ஏற்படுத்தியது. பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த [[கிப்ரால்ட்டர்]] மீது பதிலடியாக வான்வழியே குண்டுவீசினர். நேச நாடுகளின் இந்த உட்பூசல், நாசி ஜெர்மனியின் பரப்புரைக்கு தீனியாக பயன்பட்டது.
 
 
 
[[பகுப்பு:1940 நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மிர்சு_அல்-கபீர்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது