முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{பல்லவ வரலாறு}}
[[Image:mamallapuram3.jpg|thumb| [[மகாபலிபுரம்|மகாபலிபுரத்]]தில் உள்ள குடைவறைக் கோவில்கள். மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில்தான் இவற்றின் கட்டுமானம் தொடங்கியதாக அறியப்படுகின்றது.]]
'''மகேந்திரவர்மன்''' (கி.பி. 600 முதல் 630 வரை) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வடபகுதிகளை ஆண்ட [[பல்லவர்|பல்லவ]] அரசனாவான். இவன் [[களப்பிரர்|களப்பிரரை]] ஒடுக்கி மீண்டும் பல்லவ அரசை நிறுவிய [[சிம்மவிஷ்ணு|சிம்மவிஷ்ணுவின்]] மகனாவான். இவனது ஆட்சிக்காலத்தில்தான் [[சாளுக்கியர்|சாளுக்கிய]] பேரரசன் [[இரண்டாம் புலிகேசி]] [[காஞ்சி]]யின் மீது படையெடுத்தான். புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டு பல்லவ சைன்யம் தோற்கடிக்கப்பட்டது.
மகேந்திரவர்மன் [[இலக்கியம்]] மற்றும் [[கட்டிடக்கலை]]களைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ்ப்பெற்ற [[குடைவறைக் கோவில்]] கலையின் முன்னோடி இவ்வரசனே. மகேந்திரவர்மன் தான் கட்டிய [[மண்டகப்பட்டு]] குடைவறைக் கோவிலின் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். மகேந்திரவர்மனின் சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை [[மகாபலிபுரம்|மகாபலிபுரத்]]தில் காணலாம்.
[[மட்டவிலாச் பிரஹசனம்]] என்னும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான், இது [[சைவம்|சைவ]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும்.
மகேந்திரவர்மன் இடையில் [[சமணம்|சமண]] மதத்தைத் தழுவியிருந்தான், பின்னர் சைவ [[நாயன்மார்கள்|நாயன்மார்களி]]ல் ஒருவரான [[அப்பர்|அப்பரால்]] தன்நோய்த் தீர்க்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினான்னென்று அறிகின்றோம்.
மகேந்திரவர்மனையடுத்து பல்லவ அரசர்களில் மிகப்புகழ்பெற்றவனும் மகேந்திரவர்மனின் மகனுமான [[முதலாம் நரசிம்மன்|நரசிம்மவர்மன்]] அரியணையேறினான்.
==தகவல் ஆதாரங்கள்==
<div class="references-small">
* {{cite book | first= K.A. | last= Nilakanta Sastri | authorlink= | coauthors= | year=2000 | title= A History of South India | edition= | publisher=Oxford University Press | location= New Delhi| id= }}
* {{cite book | first= Durga | last= Prasad | authorlink= | coauthors= | year=1988 | title= History of the Andhras up to 1565 A. D.| edition= | publisher= P. G. Publishers | location= Guntur, India| id= }}
</div>
[[Category:பேரரசுகள்]]
[[பகுப்பு:பல்லவர்]]
[[en:Mahendravarman I]]
|