ஏ. பி. நாகராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
No edit summary
வரிசை 36:
 
==திரைப்படத் துறை பங்களிப்புகள்==
1953ஆம் ஆண்டில் இவரது நாடகம் "நால்வர்" திரைப்படமாக்கப்பட்டபோது அதில் திரைக்கதை, வசனம் எழுதினார். இதுவே அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது. [[நால்வர் (திரைப்படம்)|நால்வர்]] திரைப்படத்தில் கதைத்தலைவனாக நடித்தார். 1955ஆம் ஆண்டின் நம் குழந்தை மற்றும் நல்ல தங்காள் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1956இல் [[சிவாஜி கணேசன்]] நடித்த [[நான் பெற்ற செல்வம்]] திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியபோது அதில் நடித்த [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனுடன்]] அறிமுகமானார். திருவிளையாடல் படத்தில் ஏ. பி. நாகராஜன் புலவர் நக்கீரர் வேடத்தில் நடித்தார். மாங்கல்யம் படத்தில் திரைக்கதை வசனத்தை எழுதியதுடன் நடித்தார்.
 
1957ஆம் ஆண்டில் நடிகர் [[வி. கே. ராமசாமி]]யுடன் இணைந்து [[ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ்]] என்ற பெயரில் [[மக்களைப் பெற்ற மகராசி]] , [[நல்ல இடத்துச் சம்பந்தம்]] ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். துவக்கத்தில் தற்கால சம்பவங்களையொட்டி இயக்கிய நாகராஜன் 1960களின் இடையில் புராணக் கதைகளை ஒட்டி "சரஸ்வதி சபதம்", "திருவிளையாடல்", கந்தன் கருணை", திருமால் பெருமை" போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் 25. ஐந்து திரைப்படங்களுக்கு கதை ஆசிரியராகவும், 3 திரைப்படங்களில் நடித்துமுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஏ._பி._நாகராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது