கருநாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பா.ஜம்புலிங்கம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
'''கருநாடகம்''' (கர்நாடகம் , [[கன்னடம்]] : [[:kn:ಕರ್ನಾಟಕ|ಕರ್ನಾಟಕ]]) இந்தியாவின் தென் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்]] கீழ் இம் மாநிலம் நவம்பர் 1,1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம் மாநிலம் 1973 -இல் கருநாடகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
கருநாடக மாநிலமானது மேற்கில் அரபிப் பெருங்கடலையும் வட மேற்கில் [[கோவா]]வையும், வடக்கில் [[மகாராஷ்டிரா]]வையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் [[தமிழ்நாட்டையும்]], தென் மேற்கில் [[கேரளாவையும்]], எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம் மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள்தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. [[கன்னடம்]] ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது.
 
கருநாடகம் என்ற பெயருக்கு பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். [[ஆங்கிலேயர்]]கள் இம் மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/கருநாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது