கண்புரை அறுவைச் சிகிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
|||
வரிசை 10:
OtherCodes = |
}}
''' கண்புரை அறுவை''' ''(Cataract surgery)'' என்பது மாந்தக் கண்ணில் உருவாகிய காட்சி மறைக்கும் இயற்கையான படிக [[வில்லை (உடற்கூற்றியல்)|வில்லையை]] (இது கண்புரை எனப்படுகிறது) நீக்கும் மருத்துவச் செயல்முறையாகும். அகவை முதிரும்போது வளர்சிதை மாற்றங்களால் படிகவில்லை நாரிழைகளில் கண்புரை உருவாகி அதன் ஒளிபுகும் தன்மையைக் குறைத்து பார்வைக் குறைபாட்டை அல்லது பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. அகவை முதிர்வு மாற்றங்களால் ஏற்படும் இந்தக் கண்புரை மட்டுமன்றி, இளங்குழவிகளும் பிறப்புவழி கண்புரையுடன் பிறப்பதுண்டு. நேரடி கண்நேர்ச்சியாலோ (கண்விபத்தாலோ) கண்சொட்டு மருந்துகளாலோ, குறிப்பாக பருவகங்களின் (steroids) நெடுங்காலப் பயன்பாட்டாலோ கண்புரை உருவாகலாம்.
இயற்கையான வில்லை அறுவையால் நீக்கப்பட்டதும், செயற்கை கண்ணக வில்லை பொருத்தப்படுகிறது (கண்மருத்துவர்கள் இதைப் "பதிக்கப்படுகிறது" என்கின்றனர்). கண்புரை அறுவை கண் மருத்துவரால் இதய மின்னலை வரைவிவழிக் கண்காணிப்புடன் அறுவையரங்கில் அல்லது மருத்துவ மனையில் செய்யப்படுகிறது. இதற்கு விழிவெளியுறை அல்லது விழிப்பின்னுறை விழிமேலுறைப் பகுதி மரத்துபோகச் செய்யப்படுகிறது. இம்முறை நோயாளிக்கு மிகவும் ஏந்தானதாகும். ஏறத்தாழ 90% அறுவைகள் நல்ல பார்வையுடனும் மிகக் குறைந்த சிக்கலுடனும் வெற்றிகரமாகச் செய்யப்படுகின்றன.<ref name="UIEC">University of Illinois Eye Center. [http://www.uic.edu/com/eye/LearningAboutVision/EyeFacts/Cataracts.shtml "Cataracts."] Retrieved August 18, 2006.</ref> கவனிப்பாக குறைந்தது ஆறு மணி நேரத்துக்குள் பகல் நேரத்தில் குறைந்த இடையீட்டுடனும் உயர் பொறுப்புடனும் மிகச் சிறிய துணிப்புடனும் மிக விரைவான அறுவைக்குப் பிந்திய மீட்புடனும் கண்புரை அறுவை உலகெங்கும் செய்யப்படுகிறது.
|