'''நீலகிரி மந்தி''' (Nilgiri langur) என்பவைஎன்பது [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்]] பகுதியில் உள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் [[குரங்கு]] இனம் ஆகும். இவை [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] [[குடகு]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[பழனி மலைகள்]], [[கேரளம்|கேரலத்தின்]] [[ஏலக்காய் மலை]] ஆகிய மலைகளில் வாழுகின்றன. இதன் உடல் பளபளபளப்பான கருமையாகவும், மஞ்சளும் பழுப்பும் கலந்த தலையும் கொண்டவை. இதன் அளவு சாதாரணக் குரங்கின் அளவே இருக்கும். நீண்டவால் கொண்டவை. இக்குரங்குகள் ஒன்பது அல்லது பத்து எனஉறுப்பினர்களைக் கொண்ட கூட்டமாக வாழும்.<ref name="iucn" /> இதன் முதன்மை உணவு பழங்கள், இலைகள், தண்டுகள் ஆகும். சிலசமயம் விளை நிலங்களைவிளைநிலங்களை வேட்டையாடும். இவற்றின் எண்ணிக்கை, மென்மயிர் அடர்ந்த தோலுக்காகவும்,"பாலுணர்வைத் தூண்டும் மருந்து" என்ற நம்பிக்கையாலும் வேட்டையாடப்படுவதால் குறைவடைந்ததன் பொருட்டு இது அழியவாய்ப்புள்ள இனம் என வகைபடுத்தப்பட்டுள்ளது.