சிறீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சிறீ வெங்கடேசுவரா கலை அறிவியல் கல்லூரி (Sri Venkateshwara College of Arts and Science at Peravurani)[1] என்பது தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் செயல்படும் சுயநிதி, மகளிர், கலை அறிவியல் கல்லூரி ஆகும்.

சிறீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரைவையக் தலைமை கொள்
வகைசுயநிதி, மகளிர், கலை அறிவியல்
உருவாக்கம்1998
கல்வி பணியாளர்
76
அமைவிடம், ,
வளாகம்பேராவூரணி
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அறிமுகம் தொகு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணியில் துவங்கப்பட்ட சிறீ வெங்கடேசுவரா கலை அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாகும்.[2] 1998ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கல்லூரி 2010-2011 கல்வியாண்டு முதல் மகளிர் கல்லூரியாக செயல்படுகிறது. இக்கல்லூரியினை புது தில்லி, பல்கலைக்கழக மானியக் குழு, யுஜிசி சட்டம் பிரிவு 12பியின் படி மானியங்களைப் பெறுவதற்கு தகுதி பெற்ற கல்லூரியாக அங்கீகரித்துள்ளது.[3]

அமைவிடம் தொகு

இக்கல்லுரி பேராவூராணி தொடருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் பேராவூராணி-அறந்தாங்கி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

படிப்புகள் தொகு

சிறீ வெங்கடேசுவரா கலை அறிவியல் கல்லூரியில் 15 இளங்நிலை 9 முதுநிலை பாடங்களில் படிப்பினை வழங்குகின்றது.

இளநிலை தொகு

  • தமிழ்
  • ஆங்கில இலக்கியம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்
  • வணிகவியல் (கணினி பயன்பாடு)
  • வணிக நிர்வாகவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணினி அறிவியல்
  • தகவல் தொழில்நுட்பவியல்
  • நுண்ணுயிரியல்
  • உயிர்தொழில்நுட்பவியல்
  • கணினி பயன்பாடு

முதுநிலை தொகு

  • தமிழ்
  • ஆங்கில இலக்கியம்
  • வணிகவியல்
  • கணினி அறிவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • நுண்ணுயிரியல்
  • வணிக நிர்வாகவியல்

மேற்கோள்கள் தொகு