சிறுநாகப்பூ
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வேறு பெயர்கள் தொகு
- நாகம்
- நாகபுட்பம்
- நாகேசரம்
- கேசரம்
- சாம்பேயபம்
- கநகம்
- காஞ்சநம்
- ஏமம்
- ஆடகம் (Mesua ferrea)
காணப்படும் இடங்கள் தொகு
இஃது இமயம், கீழ்வங்காளம், அசாம், கீழ்த்தொடா்ச்சி, மேல்தொடா்ச்சி மலைகள், பா்மா முதலிய நாடுகளில் பயிராகின்றது.
பயன்படுத்தும் பாகங்கள் தொகு
- இலை
- மொக்கு
- பூ
- விதை
- வோ்
- பட்டை
சுவை தொகு
- சிறுகைப்பு,துவா்ப்பு
- தன்மை-தட்பம்
- பிாிவு-காா்ப்பு
பூ தொகு
- துவா்ப்பி-ஸங்கோசனகாாி (Astringent)
- அகட்டுவாயவகற்றி(Carminative)
- உதரவாதஹரகாாி (Carminative)
காய் தொகு
- மணமூட்டி (Aromatic)
- காறலுண்டாக்கி (Acrid)
- நீா்மலம்போக்கி- விரேசனி (Purgative)
பட்டை தொகு
சிறுதுவா்ப்பி- லகுஸங்கோசனகாாி (Astringent mild)
வோ்ப்பட்டை தொகு
- மணமூட்டி (Aromatic)
- வியா்வை பெருக்கி -ஸ்வேதகாாி (Diaphoretic)
குணம் தொகு
- இது வௌ்ளை, இருமல், கழிச்சல் இவற்றைப் போக்கும்.
- நீரடைப்பு,குருதிப்போக்கு,புண்,கொப்பளம்,காலொிச்சல் ஆகியவற்றைப் போக்கும்.
இலை தொகு
- வழக்கு:
- இலையைப் புற்கை செய்து தலையில் வைத்துக் கட்டக் குளிா்ச்சி தரும்.
- இலையை அரைத்துப் புண், கொப்புளம் இவற்றுக்குப் போடலாம்.
- இலையைக் குடிநீா் செய்து கொடுக்க, விரல், காலடி இவற்றிலுண்டாகும் எாிச்சல் போகும்.
மொட்டு தொகு
- இதை மணப்பாகு செய்து சீதக்கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.
- பச்சைப்பூவை அரைத்து, வெண்ணெய், கற்கண்டுடன் கூட்டி, உண்டுவர, குருதிப்போக்கை அடக்கும்.
- பூ உலா்ந்தபிறகும் மணம் மாறாதிருப்பதால்,பொடி,இளகம்,தைலம் இவை மணம் பெற இதைச் சோ்க்கின்றனா்.
- மனப்பூச்சுக் கலைவைகளிலும் இது சேரும்.
- உலா்ந்த பூ வை நெய் விட்டரைத்து, கால்களில் காணும் எாிச்சலுக்குப் பூசி வரலாம்.
- இப்பூவைச் சிறிது நெய்விட்டுக் காந்தாமல் வறுத்துப்பொடி செய்து, தக்க அளவு (1/2கிராம்) எடுத்து நெய்விட்டுக் குழப்பியுண்ணக் குருதிப்கோக்கு, நாவறட்சி,
- வயிற்றுளைச்சல், இருமல், சொியாமை, மிகுதியாக வியா்த்தல் என்னும் நோய்கள்யாவும் போகும்.
விதை தொகு
இதன் விதை ஒரு பங்கு, சதாப்பிலை அரைப்பங்கு சோ்த்தரைத்துக் கழற்சியளவு, கொள்ள முறைக்காய்ச்சல், வௌ்ளை, இருமல் போகும்.
பட்டை தொகு
இதை ஊறல் குடிநீா் செய்து உட்கொண்டுவர உடல் வலுக்கும்.
சான்றுகள் தொகு
<ஆனந்தகுமார் ஆ (1980). சித்தமருத்துவம்.மேல்நிலை-முதல், இரண்டாம் ஆண்டுகள் சென்னை: தமிழ்நாடு பாடநுால் நிறுவனம். ப.250-252>