சிவத்தையாபுரம்
சிவத்தையாபுரம் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் தேர்வுநிலைப் பேருராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாகும். இந்த ஊர் தூத்துக்குடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி வானூர்தி நிலையத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு ஊராகும். சுமார் 5000 க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இவ்வூர் வாழ்கின்ற மக்கள் இந்து மற்றும் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர்..
வழிபாட்டுத் தலங்கள் தொகு
இந்து சமயக் கோயில்கள் தொகு
- அருள்தரும் ஆனந்த விநாயகர் திருக்கோவில்[1]
- அருள்தரும் வித்யா கணபதி திருக்கோவில்
- அருள்தரும் முத்துமாலை அம்மன் திருக்கோவில்
- அருள்தரும் நாராயண சுவாமி திருக்கோவில்
- அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவில்
- அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்
- அருள்மிகு கிழக்குசாமி திருக்கோவில்
கிறித்தவ சமயக் கோயில்கள் தொகு
- தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயம் (தென்னிந்திய திருச்சபை)
- புனித சுவாமிநாதர் ஆலயம் (ரோமன் கத்தோலிக்கப் பிரிவு)
பள்ளிகள் தொகு
- அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து துவக்கப்பள்ளி[2]
- டி.டி.டி.ஏ (T.D.T.A.) நடுநிலைப்பள்ளி
- ஆர்.சி நடுநிலைப்பள்ளி
- பாரத் ஆங்கிலப்பள்ளி
- நேசனல் ஆங்கிலப்பள்ளி
- அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து ஆங்கிலப்பள்ளி
- அருள்மிகு முத்துமாலை அம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி
மருத்துவமனைகள் தொகு
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
- அரசு கால்நடை மருத்துவமனை
வங்கிகள் தொகு
- தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி
- கிராமக் கூட்டுறவு வங்கி
- பாண்டியன் கிராம வங்கி
நூலகம் தொகு
- அரசுப் பொது நூலகம்
திருவிழாக்கள் தொகு
இந்து சமயம் தொகு
- ஆடி மாதம் கடைசி செவ்வாய் அன்று நடைபெறும் முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா. (இத்திருவிழா சுற்று வட்டார கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று)
- பங்குனி மாதம் கடைசி வெள்ளி அன்று நாராயண சுவாமி கோவில் கொடைவிழா
- தை மாதம் அனைத்து கோவில்களின் வருஷாபிஷேக விழா
10 நாட்கள் தசராத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, தமிழ் வருடப் பிறப்பு, மகா சிவராத்திரி, கார்த்திகை தீபத் திருவிழா, திருவிளக்கு பூஜை ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
கிறித்தவ சமயம் தொகு
- தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயப் பிரதிஷ்டை மற்றும் அசனப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை அடுத்து வரும் புதன்கிழமை கொண்டாடப்படும்.
- புனித சுவாமிநாதர் ஆலயப் பிரதிஷ்டை
- கிறித்துமசு பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு, ஈஸ்டர், மற்றும் புனித வெள்ளி ஆகிய விழாக்களும் மத பேதமின்றி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தொழில்கள் தொகு
பேருந்து வசதி தொகு
சாயர்புரம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் சிவத்தையாபுரம் செல்கின்றன. சாயர்புரம் வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன.
சந்தை, தேரி, தோட்டக்காடு, செங்குட்டம், சாலை ஆகியன இவ்வூரில் வழங்கி வரும் சில இடக்குறிப்புகளாகும்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "சிவத்தையாபுரம் கோயில்களில் வருஷாபிஷேக விழா". www.dinakaran.com. Archived from the original on 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-03-26.
- ↑ "தூத்துக்குடி மாவட்ட பள்ளிகள் - தினமலர்". www.dinamalarnellai.com (in ஆங்கிலம்). Archived from the original on 2018-07-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-26.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.