சீதா துரைசாமி

இந்திய இசைக் கலைஞர்

சீதா துரைசாமி ( Seetha Doraiswamy ) 27 ஜனவரி பிறப்பு:1926 சனவரி 27 - இறப்பு: 2013 மார்ச் 14), பொதுவாக மடிசார் மாமி என்று அழைக்கப்படும் இவர், ஓர் புகழ்பெற்ற கருநாடக இசையில் பல கருவி இசைப்பவராக இருந்தார். அழிந்து போகும் நிலையில் இருக்கும் இந்திய இசைக் கருவியான ஜலதரங்கத்தின் கடைசி அங்கீகரிக்கப்பட்ட பெண் நிபுணராவார்.[1] முதல் கருநாடக இசை நிறுவனமான சென்னை இசைச் சங்கத்திலிருந்து தங்கப்பதக்கம் பெற்ற முதல் (மற்றும் இன்றுவரை இளைய) பெண் இசைக்கலைஞர் ஆவார்.[2] 2001ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான கலைமாமணி விருதைப் பெற்ற ஒரே ஜலதரங்க நிபுணர் ஆவார். "(சீதா) ஜலதரங்கம் அழிந்து போவதைத் தடுக்க அயராது உழைத்துள்ளார், அதற்காக மட்டுமே பெரும்பாலும் அங்கீகரிக்கப்படுகிறார்; நமது கலாச்சார விதிமுறைகள் இல்லாத ஒரு காலகட்டத்தில் சமமான பெண் பிரதிநிதித்துவத்திற்கான காரணத்திற்காக இவர் வெற்றி பெற்றார் என்ற உண்மையை கவனத்தில் கொள்ள வேண்டிய நேரம் இது. கூடுதலாக, இவரது தத்துவார்த்த அறிவு கர்நாடக இசையின் பல நவீன கருத்துகளுக்கு அடித்தளமாக இருந்தது." [3]

கலைமாமணி சீதா துரைசாமி ஐயர்
ஒரு அனைத்திந்திய வானொலிப் பதிவில் சீதா (1950)
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சீத்தாலட்சுமி
பிறப்பு27 January 1926
அடச்சானி, திருநெல்வேலி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
பிறப்பிடம்இந்தியா
இறப்பு2013 மார்ச் 14 (aged 87)
இசை வடிவங்கள்இந்தியப் பாரம்பரிய இசை
தொழில்(கள்)பாரம்பரிய இசைக்கருவி
இசைக்கருவி(கள்)ஜலதரங்கம்
இசைத்துறையில்1937– 2013
வெளியீட்டு நிறுவனங்கள்HMV

சுயசரிதை தொகு

 
1938இல் என். துரைசாமி உடன் சீதா (இடது)

ஆரம்ப ஆண்டுகளில் தொகு

சீதா (இவரது குடும்பத்திற்கு சீதாம்மா) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடச்சானி (பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணம்) என்ற கிராமத்தில் பம்பு கணபதி ஐயர் மற்றும் மீனாட்சி ஐயர் ஆகியோருக்கு பிறந்தார்.

பெற்றோரின் ஊக்கத்தின் கீழ், இவர் சிறு வயதிலேயே கொடகநல்லூர் சுப்பையா பாகவதரிடமிருந்தும் பின்னர் கோட்டு வாத்தியம் வித்வான் சீதாராமா பாகவதரின் கீழும் கருநாடக இசையைக் கற்கத் தொடங்கினார். பேராசிரியர் பி. சாம்பமூர்த்தியால் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் இசைத் துறையில் தனது 10 வயதில் சேர்ந்த பின்னர், சீதா 1937 இல் சென்னைக்குச் சென்று தா. கி. பட்டம்மாளுடன் இணைந்து பயிற்சி பெற்றார். அங்கு இவர் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண்ணானார். இவ்விருதைப் பெற்ற இளையவர் என்ற சாதனையை இவர் இன்னும் வைத்திருக்கிறார்.

இவர் 14 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவரது இசை ஆவலைப் புரிந்துகொண்ட இவரது கணவர், மியூசிக் அகாடமி நடத்திய ஒரு இசை வகுப்பில் சேர இவரை ஊக்குவித்தார். தனது இசை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த வாலாடி கிருட்டிணையரின் கீழ் தனது படிப்பை முடித்தார்.

ஜலதரங்கம் பயிற்சி தொகு

கருநாடக இசையின் தத்துவார்த்த அம்சத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு அகாடமியில் கோட்டுவாத்யம் அல்லது ஜலதரங்கம் கற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜலதரங்கத்தை நோக்கி ஏன் நகர்ந்தார் என்று இவரிடம் கேட்டபோது, சீதா, "அப்போது தனக்கு பத்து வயது, மற்றும் ஜலதரங்க கலைஞர்கள் பயன்படுத்திய கருவிகள் வீடுகளில் விளையாடும்போது குழந்தைகள் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களை எனக்கு நினைவூட்டின. தண்ணீரைக் கொண்ட அடிக்கும் கருவிகள் மிகவும் வேடிக்கையாகத் தெரிந்தன " என்றார்.[2] ஜலதரங்கக்தைக் கற்பிக்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர், இரமனையா செட்டியார், அகாடமியில் உள்ள எந்த மாணவர்களும் கருவியை வாசிக்கும் அளவுக்கு புத்திசாலிகள் இல்லை என்று நம்பினார். பேராசிரியர் சாம்பமூர்த்தியின் வற்புறுத்தலின் பேரில், இரமனையா சீதாவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சீதாவுக்கு பயிற்சி தொடங்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களின் கீழ் ஒன்றரை மாதங்கள் கற்றுக்கொண்டார். மேலும் இவரது கோட்பாடு குறித்த அறிவு தனது வாழ்நாள் முழுவதும் தனது பயிற்சியை நிறைவு செய்வதில் போதுமானதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இவரது நிதி நிலையை உணர்ந்த பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி சீதாவுக்கு தனது முதல் ஜலதரங்கக் கோப்பைகளை வாங்கினார்.

தொழில் தொகு

இவரது பயிற்சி இளம் வயதிலேயே தொடங்கியிருந்தாலும், குடும்பக் கடமைகள் இவரை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதைத் தடுத்தன. சீதா 14 வயதில் என்.துரைசாமியை மணந்து 10 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இவர்கலில் ஒரு மகனின் மரணம் இவரை சிதறடித்தது. இவரது குடும்பத்தின் ஊக்கத்தின் கீழ் தான் இவர் தனது 41 வயதில் மீண்டும் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். இந்த குறிப்பிட்ட சூழ்நிலையை மேற்கோள் காட்டி, இவர் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். ஒரு முன்னோடி பெண் இந்தியராக விருதுகளைப் பெற்றுள்ளார்.

குறிப்புகள் தொகு

  1. "IMC OnAir JALTARANG – Waves of Sound (2008, part 1/3):Internet Archive". Archive.org. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
  2. 2.0 2.1 "Entertainment Chennai / Personality : Musical waves with water". The Hindu. 16 December 2005. Archived from the original on 19 ஜனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல; மருந்தாகவும் பயன்படுகிறது இசைக் கருவி | Pondicherry". Dinamani. 17 May 2010. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_துரைசாமி&oldid=3929983" இலிருந்து மீள்விக்கப்பட்டது