சுமன் தியோதர்

இந்திய இறகுப் பந்தாட்ட வீராங்கனை

சுமன் தியோதர் (Suman Deodhar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் இறகுப்பந்து வீராங்கனையாவார். இந்தியாவின் துடுப்பாட்ட விளையாட்டு வீரர் திங்கர் பல்வந்து தியோதரின் மகளாகவும் இவர் அறியப்படுகிறார். 1930 ஆம் ஆண்டு சுமன் தியோதர் பிறந்தார். அதவாலே என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதால் இவர் சுமன் அதவாலே என அழைக்கப்பட்டார்.

தொழில் தொகு

சுமன் தியோதர் தனது சகோதரி சுந்தர் தியோதருடன் இணைந்து 1946 ஆம் ஆண்டு இறகுப்பந்தாட்டப் பெண்கள் இரட்டையர் பிரிவில் தனது முதல் தேசிய பட்டத்தை வென்றார். தொடர்ந்து 1947 மற்றும் 1951, 1954 ஆம் ஆண்டுகளிலும் இவ்வெற்றிகள் தொடர்ந்தன. 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டையர் போட்டியிலும், 1951 பெண்கள் ஒற்றையர் போட்டியிலும் சுமன் தியோதருக்கு தங்கப்பதக்கம் கிட்த்தது. தியோதர் சகோதரிகள், சுமன், சுந்தர் மற்றும் தாரா ஆகியோர் இந்திய தேசிய இறகுப்பந்து வெற்றியாளர் போட்டிகளின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தினர்.[1][2] 1946 ஆம் ஆண்டு சபல்பூரில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சுந்தர் தியோதர் மூன்று பட்டங்களை வென்றார்.

முடிவுகள் தொகு

ஆண்டு போட்டி நிகழ்வு தரம் பெயர்
1946 இந்தியா: தேசிய வெற்றியாளர் பெண்கள் இரட்டையர் 1 சுமன் தியோதர் / சுந்தர் தியோதர்
1947 இந்தியா: தேசிய வெற்றியாளர் கலப்பு இரட்டையர் 1 தேச் மாத்சென் / சுமன் தியோதர்
1947 இந்தியா: தேசிய வெற்றியாளர் பெண்கள் இரட்டையர் 1 சுமன் தியோதர் / சுந்தர் தியோதர்
1951 இந்தியா: தேசிய வெற்றியாளர் பெண்கள் ஒற்றையர் 1 சுமன் தியோதர்
1951 இந்தியா: தேசிய வெற்றியாளர் பெண்கள் இரட்டையர் 1 சுமன் தியோதர் / சுந்தர் தியோதர்
1954 இந்தியா: தேசிய வெற்றியாளர் பெண்கள் இரட்டையர் 1 சுமன் தியோதர் / சுந்தர் பட்வர்தன்

மேற்கோள்கள் தொகு

  1. Badminton Association of India. "List of Indian National Championship Winners". Archived from the original on 26 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 22 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Sports Team (13 March 2011). "The Other Trailblazers". தி இந்து. http://www.mid-day.com/articles/the-other-trailblazers/115245. பார்த்த நாள்: 22 August 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_தியோதர்&oldid=3930078" இலிருந்து மீள்விக்கப்பட்டது