சென்னசந்திரம், ஒசூர்

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

சென்னசந்திரம் (Chennasandiram) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

சென்னசந்திரம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635109

ஒசூர் நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த ஊரும் இந்த ஊர் அடங்கிய சென்னசந்திரம் ஊராட்சியும் ஒசூர் நகராட்சியுடன் 2019ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது.[1]

அமைவிடம் தொகு

சென்னசந்திரமானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 90 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 365 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 175 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 190 என்றும் இருந்தது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 56.71% என்று இருந்தது.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள் தொகு

  1. "8 பஞ்சாயத்துகள் இணைந்து புதிய மாநகராட்சியானது ஒசூர்". இந்து தமிழ்: 5. பெப்ரவரி 14 2019. 
  2. "Chennasandiram Village in Hosur (Krishnagiri) Tamil Nadu - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னசந்திரம்,_ஒசூர்&oldid=3753520" இலிருந்து மீள்விக்கப்பட்டது