சௌரப் குமார் சாலிகா

இந்திய எழுத்தாளர்

சௌரப் குமார் சாலிகா (ஆங்கிலம்: Saurabh Kumar Chaliha) (1930 - 2011 ஜூன் 25 ) என்றப் புனைப்பெயரில் அசாமிய சிறுகதைகள் எழுத்தாளராவார். இவரது உண்மையான பெயர் சுரேந்திர நாத் மேதி என்பதாகும். இவரது சிறுகதைத் தொகுப்பு குலாம் 1974இல் மதிப்புமிக்க சாகித்திய அகாதமி விருதை வென்றது. சாலிகா இந்த விருதைப் பெறச் செல்லவில்லை. பின்னர் அது இவருக்கு அகாதமியால் அனுப்பப்பட்டது.

சுயசரிதை தொகு

சௌரப் குமார் சாலிகா 1930ஆம் ஆண்டில் இந்தியாவின் அசாமின் தர்ரங் மாவட்டத்திலுள்ள மங்கல்தோய் நகரில் காளிராம் மேதி - சுவர்ணலதா மேதி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது தந்தை காளிராம் மேதி கடிதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர். 1919ஆம் ஆண்டு அசாம் இலக்கிய மன்றத்தின் அமர்வுக்கு தலைமை தாங்கினார்.

சாலிகா தனது பள்ளி வாழ்க்கையை 1939இல் குவகாத்தியின் புனித மேரி கான்வென்ட் பள்ளியில் தொடங்கினார், பின்னர் காட்டன் கல்லூரி பள்ளிக்கு மாற்றினார். அங்கிருந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1946 இல் சாலிகா ஐ.எஸ்.சி படிப்பதற்காக காட்டன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு இவர் ஒரு சிறந்த அறிவியல் மாணவராக இருந்தார். 1948இல் மாநிலத்தில் 5வது இடத்தில் பறக்கும் வண்ணங்கள் போல தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் சாலிகா காட்டன் கல்லூரியிலேயே இயற்பியலில் இளங்கலை அறிவியல் (பிஎஸ்சி) படிப்பைத் தேர்வு செய்தார். இருப்பினும், இவர் தனது கல்லூரி நாட்களில் பொதுவுடமை மற்றும் மார்க்சிய சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டார். மேலும் இந்திய புரட்சிகர பொதுவுடமை கட்சியுடன் (ஆர்.சி.பி.ஐ) தீவிரமாக ஈடுபட்டார். இதன் விளைவாக கைது செய்யப்பட்டு எழுத்தாளருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து தனது இளங்கலை அறிவியல் இறுதித் தேர்வுகளுக்கு சென்றார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலை அறிவியல் (எம்.எஸ்.சி) முடித்தார்.[1]

தொழில் தொகு

சாலிகா 1960இல் இந்தியா திரும்புவதற்கு முன்பு ஜெர்மனியில் பல கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்தார், அசாம் பொறியியல் கல்லூரியில் இயற்பியல் துறையில் விரிவுரையாளராக சேர்ந்தார். அதே துறையின் தலைவராக ஓய்வு பெற்ற இவர் 1990ஆம் ஆண்டில் கல்லூரியின் வாழ்நாள் கூட்டாளியாக கௌரவிக்கப்பட்டார். இவரது பல கதைகள் பல முதலில் அசாமி பத்திரிகைகள் மற்றும் பன்ஹி, இராம்தேனு, அவகான், சமகலின், சாதின், தைனிக் அசோம், அசோம் பானி போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்தன. மேலும் பல ஆங்கிலம், பெங்காலி, இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவைகள் பல்வேறு இந்திய இதழ்கள் மற்றும் தொகுப்புகளில் வெளியிடப்பட்டன.

விருதுகள் தொகு

சௌரப் குமார் சாலிகா தனது குலாம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1974ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதை வென்றார். 1995ஆம் ஆண்டில், அசாம் பள்ளத்தாக்கு இலக்கிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட சாலிகா ஒரு முறை மட்டுமே முறையான அங்கீகாரத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார். தனது விருதை ஏற்றுக்கொள்ளும் உரையில், 'நான் ஒரு ஆதாய நோக்குடன் இருப்பவனைப் போல உணர்கிறேன்' என்று கூறினார். ஒரு புனைப்பெயரில் எழுதும் இவர், குவகாத்தி நகரத்திலுள்ள ஒரு நிறுவன அமைப்பிலிருந்து அசாம் பள்ளத்தாக்கு இலக்கிய விருதை ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடையே தன்னை பகிரங்கமாக வெளிபடுத்திக் கொள்ளவில்லை. இந்த விருதினை ஏற்றுக்கொண்டபோது, ஒரு முறை மட்டுமே இவர் பகிரங்கமாக வெளிவந்தார். இந்த ஒற்றை நிகழ்வைத் தவிர, சாலிகா தனது வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற அபிமானிகளுக்கு ஒரு புதிராக இருந்தார்.

இறப்பு தொகு

சௌரப் குமார் சாலிகா சுவாச நோயால் பாதிக்கப்பட்டு குவகாத்தியின் சர்வதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு இவருக்கு சிறு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இவர் 2012 ஜூன் 25, அன்று மருத்துவமனையில் சனிக்கிழமை காலை 5.40 மணிக்கு, தனது 81 வயதில் இறந்தார்.[2]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Kartik Chandra Dutt (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. பக். 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-0873-5. https://books.google.com/books?id=QA1V7sICaIwC&pg=PA209. பார்த்த நாள்: 12 October 2012. 
  2. "Saurabh Chaliha passes away". Archived from the original on 1 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌரப்_குமார்_சாலிகா&oldid=3930372" இலிருந்து மீள்விக்கப்பட்டது