சனகன்

(ஜனகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சனகன், இராமாயணக் கதையில் வரும் சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் சனகபுரியை ஆண்டு வந்த ராஜரிஷி ஆவார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார்.

ஜனகன் ராமர் மற்றும் அவரது தந்தையை வரவேற்கும் சித்திரம்.

சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் வில்லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். இதில் இராமன் வெற்றிவாகை சூடி சீதையை தனது பத்தினியாக்கினான்.[1]

இராசரிசி சனகர், அரசவையில் கூடியிருந்த முனிவர்களிடம், பிரம்மக்ஞானத்தை சரியாக விளக்குபவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாக தருகிறேன் என்றார். ஆனால் ஒரு முனிவரும் பிரம்ம வித்தை என்ற பிரம்மக் ஞானத்தை விளக்க முன் வராத நிலையில், மகரிசி யாக்யவல்கியர் பிரம்ம ஞானத்தை சனகர் உள்ளிட்ட முனிவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வு பிரகதாரண்யக உபநிடதத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. இராமாயணம் - நூல் 1: பால காண்டம் - சர்க்கம் 66
  2. http://www.free-meditation.ca/archives/12537 Raja Janaka, King or Guru]

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
இராமாயணம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனகன்&oldid=3595534" இருந்து மீள்விக்கப்பட்டது