ஜி. சுப்பிரமணிய ஐயர்

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்

ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர் (Ganapathy Dikshitar Subramania Iyer, 19 சனவரி 1855 – 18 ஏப்ரல் 1916) இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவராவார். இவர் 1878 செப்டம்பர் 20 அன்று தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளராகவும், மேலாண்மை இயக்குநராகவும், பதிப்பாளராகவும் இருந்தவர்.[1] சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர்
பிறப்புசனவரி 19, 1855(1855-01-19)
தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்புஏப்ரல் 18, 1916(1916-04-18) (அகவை 61)
சென்னை மாகாணம், இந்தியா
பணிவிரிவுரையாளர், இதழிலியலாளர், தொழில் முனைவோர்
பெற்றோர்கணபதி தீட்சிதர்

சுப்பிரமணிய ஐயர் 1885 ஆம் ஆண்டில் பம்பாயில் இடம்பெற்ற இந்திய காங்கிரசின் முதலாவது மாநாட்டில் அம்மாநாட்டின் முதலாவது தீர்மானமாக இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமாகக் கொண்டு வந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "WILLING TO STRIKE AND NOT RELUCTANT TO WOUND". S. Muthiah (The Hindu). 13 செப்டம்பர் 2003. http://www.hindu.com/th125/stories/2003091300770200.htm. பார்த்த நாள்: 6 திசம்பர் 2012. 
முன்னர்
இல்லை
மேலாண்மை இயக்குனர் தி இந்து
1878 - 1898
பின்னர்
மு. வீரராகாவாச்சாரியார்
முன்னர்
இல்லை
ஆசிரியர் தி இந்து
1878 - 1898
பின்னர்
கோ. கருணாகர மேனன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._சுப்பிரமணிய_ஐயர்&oldid=3579124" இருந்து மீள்விக்கப்பட்டது