ஜி. சுப்பிரமணிய ஐயர்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்
ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர் (Ganapathy Dikshitar Subramania Iyer, சனவரி 19, 1855 - ஏப்ரல் 18, 1916) இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவர்; செப்டம்பர் 20, 1878 இல் தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர்.[1] சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர் | |
---|---|
![]() | |
பிறப்பு | சனவரி 19, 1855 தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | ஏப்ரல் 18, 1916 சென்னை மாகாணம், இந்தியா | (அகவை 61)
பணி | விரிவுரையாளர், இதழிலியலாளர், தொழில் முனைவோர் |
சுப்பிரமணிய ஐயர் 1885 ஆம் ஆண்டில் பம்பாயில் இடம்பெற்ற இந்திய காங்கிரசின் முதலாவது மாநாட்டில் அம்மாநாட்டின் முதலாவது தீர்மானமாக இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமாகக் கொண்டு வந்தார்.[2]
மேற்கோளும் குறிப்புகளும்தொகு
- ↑ "WILLING TO STRIKE AND NOT RELUCTANT TO WOUND". S. Muthiah. The Hindu (September 13, 2003). பார்த்த நாள் டிசம்பர் 06, 2012.
- ↑ "லோக சஞ்சாரம்". ஆனந்த விகடன். 1955. http://s-pasupathy.blogspot.com.au/2017/01/1_19.html.
முன்னர் இல்லை |
மேலாண்மை இயக்குனர் தி இந்து 1878 - 1898 |
பின்னர் எம். வீரராகவாச்சாரியார் |
முன்னர் இல்லை |
ஆசிரியர் தி இந்து 1878 - 1898 |
பின்னர் சி. கருணாகர மேனன் |