ஜி. நிஜாமுதீன்

ஜி.நிஜாமுதீன் (G. Nizamudeen) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டத்தின், நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக தி.மு.க உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வழக்கறிஞராகவும், ஜம்மியத்துல் உலமா ஹிந்தின் மாநிலச்செயலாளராக இருக்கின்றார்.[2]. உலக தமிழர் பேரமைப்பின் துணைத்தலைராகவும், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அறங்காவலர்களில் ஒருவராகவும், ஜல்லிக்கட்டு, காவிரி போன்ற தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் செயல்படக்கூடியவராகவும் அறியப்பட்டவர். [3].

காரைக்காலில் அமைந்துள்ள மார்க் என்ற தனியார் துறைமுகத்திலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதினால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கபடுவதைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்காக கைது செய்யப்பட்டவர். [4].

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1996 நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) இந்திய தேசிய லீக் 43.68 46,533

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 9. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. ஜமாத் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டுகோள் -ஜி. நிஜாமுதீன் வேண்டுகோள்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "-உலக தமிழர் பேரமைப்பின் துணைத்தலைராக வழக்கறிஞர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் தேர்வு". Archived from the original on 2020-06-05. பார்க்கப்பட்ட நாள் 2020-06-05.
  4. மார்க் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._நிஜாமுதீன்&oldid=3573118" இலிருந்து மீள்விக்கப்பட்டது