ஜோசப் கோயபெல்ஸ்
பால் யோசப் கோயபெல்ஸ் (Paul Joseph Goebbels) (29 அக்டோபர் , 1897 – 1 மே , 1945) செருமனியின் மிக முக்கிய அரசியல்வாதிகளுள் ஒருவர். அடால்ப் இட்லருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராக விளங்கிய இவர் 1933 முதல் 1945 வரையுள்ள காலத்தில் செருமானிய ரெய்க் அமைச்சரவையின் மனிதவள மேம்பாடு மற்றும் கொள்கை பரப்பு அமைச்சராக பதவி வகித்தவர். இவர் 1921இல் ஏடல்பெர்க் பல்கலைக்கழகத்தில் 18ஆம் நூற்றாண்டின் நாடகக் கதைகளை ஆய்வறிந்ததின் வாயிலாக முனைவர் பட்டம் பெற்றவர். தன் உணர்ச்சிமிகு பேச்சாற்றலின் மூலம் செருமனிக்கு யூதப்பகைமையை உணர்த்தியமைக்காகஅறியப்படுகிறார். இவரின் யூதப்பகைமைக்குச் சான்றாக கிரிஸ்டல்நாக்ட் (கிரிஸ்டல் நைட்-Crystal Night) கொடூரநிகழ்வு குறிப்பிடப்படுகிறது. இவர் பல புதினங்களையும், நாடகங்களையும் எழுதியுள்ளார். ஆனால் அவற்றை வெளியிட எந்த பதிப்பகத்தாரும் முன் வரவில்லை. இவரின் கருத்துக்கள் பொதுவுடமைவாதிகளையும், சோசலிசவாதிகளையும் எதிர்ப்பதாகவும், ஸ்ட்ரோமப்டேலுங் எஸ் ஏ அமைப்பினரை ஆதரிப்பதாகவும் அமைந்தன. 1923இல் நாட்சி அரசியலில் நுழைந்த இவர் 1928களில் மிக உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவராக மதிக்கப்பட்டார். அதன் பின் 1933இல் இட்லர் அரசு பதவியில் அமர்ந்தபொழுது கொள்கை பரப்பு அமைச்சராக பதவியில் அமர்ந்தார். இரண்டாம் உலகப்போரில் செருமானியர் பலரை போரில் பங்குபெற வைத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 1943ஆம் ஆண்டில் அச்சு நாடுகளுக்கு எதிராக உலகநாடுகள் திரும்புகையில் அவற்றுக்கு எதிராக செருமானியர் திரும்புமாறு தன் பரப்புரை மூலம் ஒன்று திரட்டினார் என்று கூறப்படுகிறது. கோயபெல்ஸ், இட்லரின் இறுதி நாட்களில் அவர் இறக்கும் வரை உடனிருந்தார். இட்லர் இவரைத் தனக்குப் பின்வரும் அதிகாரப்பூர்வ வேந்தராக அறிவித்துவிட்டு இறந்தார். அவர் இறந்தபின் கோயபெல்ஸ் 1 மே, 1945 அன்று தன் மனைவி மகதா, ஆறு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பு பற்றி பலவிதங்களில் பேசப்படுகிறது. முதலில் ஆறு குழந்தைகளுக்கும் மார்பின் என்ற மயக்கமருந்து கொடுக்கப்பட்டு பின் அவர்களின் வாயில் அவர் மனைவி சயனைட் நஞ்சை திணித்ததாகக் கூறப்படுகிறது. பிறகு, அவர் மனைவி சயனைட் நஞ்சை உட்கொண்டார் எனவும் கோயபெல்ஸ் இட்லரைப் போல் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் எனவும் பல்வேறு நிச்சயமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ் எஸ் காவலரை சுடச்சொல்லி ஆணையிட்டு, அக்காவலரால் சுடப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் இறப்பின் மர்மத்தைத் தழுவி டவுன்பால் (Downfall) என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது.
யோசப் கோயபெல்ஸ் | |
---|---|
![]() | |
செருமனியின் வேந்தர் (ரெய்க் செருமன்) | |
பதவியில் 30 ஏப்ரல் – 1 மே 1945 | |
குடியரசுத் தலைவர் | கார்ல் டொனிட்ஸ் |
முன்னவர் | அடால்ப் இட்லர் |
பின்வந்தவர் | யாரும் நியமிக்கப்படவில்லை (லுட்ஸ் கிராப் ஷிவரின் வோன் குரோசிக் என்பவரே தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார்) |
ரய்க் அமைச்சரவையின் மனிதவள மேம்பாடு மற்றும் கொள்கை பரப்பு அமைச்சர் | |
பதவியில் 13 மார்ச் 1933 – 30 ஏப்ரல் 1945 | |
முன்னவர் | பதவி அறிமுகப்படுத்தப்படவில்லை |
பின்வந்தவர் | வெர்னர் நவ்மென் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 29, 1897
|
இறப்பு | 1 மே 1945 பெர்லின், நாசி செருமனி | (அகவை 47)
அரசியல் கட்சி | தேசிய சோசலிச செருமன் தொழிலாளர் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | மகதா கோயபெல்ஸ் |
படித்த கல்வி நிறுவனங்கள் | போன் கல்கலைக்கழகம் ஊர்ஸ்பெர்க் பல்கலைக்கழகம் பிரெய்பெர்க் பல்கலைக்கழகம் எய்டல்பெர்க் பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி |
கையொப்பம் | ![]() |
அவருடைய புகழ்பெற்ற பிரசார வியூகத்தால் வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார். அதன் காரணத்தை அவரின் இந்தப்பேச்சின் மூலம் உணரலாம்: "எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள். அரசியல், பொருளாதார, மற்றும் ராணுவ விளைவுகளை மக்களிடமிருந்து அரசாங்கம் மறைப்பதன் மூலம், பொய்யை குறிப்பிட்ட காலம் வரை காப்பாற்றலாம். உண்மைதான் பொய்க்கு எதிரி, அதே போல, உண்மைதான் அரசாங்கத்தின் மிகப்பெரிய எதிரி என்பதால், அதிருப்தியை அடக்க எல்லா அதிகாரங்களையும் பிரயோகிப்பது அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமாகிறது."