டி. ஆர். தாமோதரன்

முனைவர் டி. ஆர். தாமோதரன் (Dr. T. R. Damodharan), மதுரையைச் சேர்ந்த இவர், சமஸ்கிருத மொழியில் பட்டமேற்படிப்பும், முனைவர் பட்டமும் பெற்றவர். மதுரை [[சௌராட்டிரா கல்லூரி, மதுரை |சௌராஷ்டிரா கல்லூரி]]யில் சமஸ்கிருத மொழி பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 2015இல் சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது பெற்றவர்.

படைப்புகள் தொகு

  • அங்கீகரிக்கப்படாத இந்திய மொழிகளில் ஒன்றான சௌராட்டிர மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் - ஆங்கிலம் – சௌராஷ்டிரம் அகராதி வெளியிட்டுள்ளார்.
  • வேங்கடரமண பாகவதர் வாழ்க்கை, பங்களிப்புகள் குறித்தான நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
  • சௌராஷ்டிரா மொழியை இளந்தலைமுறையினர் கற்றுக் கொள்வதற்காக சௌராஷ்டிரா சுழிக்கினி எனும் நூலை எழுதியுள்ளார்.

பிற படைப்பாளர்களுடன் சேர்ந்து எழுதிய நூல்கள் தொகு

பாஷா சம்மான் விருது தொகு

அங்கீகாரம் இல்லாத இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர்களுக்கு, ரூபாய் ஒரு இலட்சம், செப்புப் பட்டயம் மற்றும் சான்றிதழுடன் கூடிய சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது மதுரை டி. ஆர். தாமோதரனுக்கும், கோயம்புத்தூர் சரோஜா சௌந்திரராஜனுடன் சேர்த்து கூட்டாக 21 டிசம்பர் 2016 அன்று வழங்கப்பட்டது. [1][2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/Press_Release_(English)_BS_21-12-16.pdf பரணிடப்பட்டது 2017-05-17 at the வந்தவழி இயந்திரம் Bhasha Samman]
  2. "2015 BHASHA SAMMAN AWARDEES". Archived from the original on 2017-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._தாமோதரன்&oldid=3817763" இலிருந்து மீள்விக்கப்பட்டது