தஞ்சாவூர் சுபா ராவ்

இந்திய நிர்வாகி

தஞ்சாவூர் சுபா ராவ் (Thanjavur Subha Rao)(சுபாராவ் தஞ்சாவர்க்கர் என்றும் அழைக்கப்படுபவர்) என்பவர் இந்திய நிர்வாகி மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இவர் 1830ஆம் ஆண்டுகளில் திருவிதாங்கூர் மாநிலத்தின் திவானாக பணியாற்றினார்.

தஞ்சாவூர் சுபா ராவ் Thanjavur Subha Rao
திவான் திருவிதாங்கூர்
பதவியில்
1830–1837
ஆட்சியாளர்சுவாதி திருநாள்
முன்னையவர்டி. வெங்கட ராவ்
பின்னவர்ஆர். ரங்கா ராவ்
பதவியில்
1839 – ஜூன் 1842
ஆட்சியாளர்சுவாதி திருநாள்
முன்னையவர்டி. வெங்கட ராவ்
பின்னவர்கிருஷ்ண ராவ்

சுபா ராவ் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர், தஞ்சாவூர் மராத்தி தேசஸ்த் பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் ஆங்கிலத்தில் மிகவும் சரளமாகப் பேசக்கூடியவர். எனவே இவரை "ஆங்கிலம்" சுபா ராவ் என்றும் அழைத்தனர். திருவிதாங்கூர் சுவாதி திருநாளின் மகாராஜாவை சமசுகிருதம், மராத்தி, அரசியல் அறிவியல் மற்றும் கருநாடக இசையினைப் பயிற்றுவித்தார். 1830ஆம் ஆண்டில், திருவிதாங்கூரின் திவானாக இவர் நியமிக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Weidman, Amanda J. (2006). Singing the Classical, Voicing the Modern. Duke University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8223-3620-0. https://books.google.com/books?id=fMg7aKE8RNgC. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்_சுபா_ராவ்&oldid=3185691" இலிருந்து மீள்விக்கப்பட்டது