தமிழக மண் வகைகள்

பொதுவாக வண்டல்மண் , கரிசல்மண், செம்மண், சரளைமண்/துருக்கல்மண் மற்றும் பாலைமண் என ஐந்து வகையாக பிரிக்கலாம்.

மண்வகைகள் தொகு

வண்டல் மண் தொகு

மெல்லிய துகள்களால் ஆனது . ஆறு தன்படிதல் செயலால் ஏற்படுத்தியது மிகவும் வளமானமண் ஆகும் இதில் நெல் வாழை ,கரும்பு ஊடு பயிராக சோளம் ,உளுந்து, பாசிபயிர் பயிரிடப்படுகிறது டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் திருச்சி ,பெரம்பலூர், அரியலூர் ,கடலூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வண்டல்மண் பரவிக் காணப்படுகிறது .

கரிசல் மண் தொகு

எரிமலை குழம்பு லாவா பூமியிலிருந்து வெளிவந்து படிதலால் ஏற்பட்டது. இதில் பருத்தி, நெல், வாழை, கரும்பு, கிழங்கு வகைகள் பயிரிடப்படுகின்றன. கரிசல்மண் பொதுவாக கோவை ஈரோடு, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் பரவிக் காணப்படுகிறது.

செம்மண் தொகு

இது பொதுவாக சிவப்பு நிறமாக இருப்பதால் செம்மண் கேரட், பீட்ருட் கிழங்குகள் பயிரிடப்படுகிறது . புதுக்கோட்டை, மதுரை , ராமநாதபுரம், பெரம்பலூர் ,அரியலூர் பரவிக் காணப்படுகிறது

துருக்கல் மண் / சரளை மண் தொகு

இந்தமண் பாறைப்பரல்களால் ஆனது. பீடபூமியானது மலைப்பாங்கான பிரதேசத்தில் காணப்படும் சோளம், கம்பு, தினை வகைகள் பயிரிடப்படுகிறது வேலூர் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் துருக்கல்மண் / சரளைமண் பரவிக் காணப்படுகிறது

பாலை மண் தொகு

இவை கடற்கரை ஒட்டிய பிரதேங்களில் பரவிக்காணப்படுகிறது உப்பு மற்றும் கருவாடு, மீன் வலை உலர்த்துகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_மண்_வகைகள்&oldid=3884733" இலிருந்து மீள்விக்கப்பட்டது