திருப்பாலத்துறை பாலைவனநாத சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருப்பாலத்துறை பாலைவனநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருப்பாலத்துறை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பாலைவனநாத சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:சன்னதி தெரு, பாபநாசம், திருப்பாலத்துறை, பாபநாசம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பாபநாசம்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:பாலைவனநாதசுவாமி
தாயார்:தவளவென்னகை அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ்வருடபிறப்பு, நவராத்திரி, திருவாதிரை
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பாலைவனநாதசுவாமி, தவளவென்னகை அம்பாள் சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியர், தெட்சிணாமூர்த்தி, துர்க்கை உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ்வருடபிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி, மார்கழி மாதம் நவராத்திரி, திருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)