திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திரு அன்பில் திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில், தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள, இலால்குடி நகராட்சிக்கு அருகில், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.சோழ நாட்டு ஐந்தாவது திருத்தலம்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்
பெயர்
புராண பெயர்(கள்):திருஅன்பில் கோவில்
பெயர்:வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்
அமைவிடம்
ஊர்:திருஅன்பில் கோவில்
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வடிவழகிய நம்பி (விஷ்ணு)
தீர்த்தம்:மண்டூக தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமழிசை ஆழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டடக்கலை
விமானம்:தாரக விமானம்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

மங்களாசாசனம் தொகு

திருமழிசை ஆழ்வாரால் ஒரே ஒரு பாசுரத்தில் மட்டும் இத்தலம் பாடப்பட்டுள்ளது. பெருமாள் கிடந்த நிலையில் காட்சிதரும் ஏழு தலங்களைக் குறிப்பிடும் அவரது நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்தில் இத்தலமும் அவற்றுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனா வான் (2417)

படங்கள் தொகு

கோவில் அமைவிடம் தொகு