தீபாராதனை என்பது இந்துக் கோயில்களில் நிகழும் பூசைகளின் ஒரு பகுதியாக இடம்பெறும் ஒரு நிகழ்வு ஆகும். இது பூசையின் ஒரு முக்கியக் கட்டமாக அமைகின்றது. கற்பூர ஒளியில் கிடைக்கும் தரிசனமே தீபாராதனை. தீபாரதனையின்போது பூசகர் பலவிதங்களில் தீப ஒளியை இறைவனின் திருவுருவத்துக்கு முன்னர் காட்டுவார். நித்தியம், நைமித்தியம், காமியம் என்று சொல்லப்படும் அன்றாடப் பூசை, காரணம் குறித்த பூசை, விளைவு கருதிய பூசை என்னும் மூவகைப் பூசைகளிலும் தீபாராதனை இடம்பெறுகின்றது.[1] பூசை நிகழ்வுகளின் ஒழுங்கில் நைவேத்தியம் எனப்படும் உணவு படைத்தலுக்குப் பின்னர் தீபாராதனை தொடங்கும்.

தீப வகைகள் தொகு

தீபாராதனைக்கு உரிய தீபங்கள் பெரும்பாலும் பித்தளை போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன. பூசையின்போது பெரிதும் பயன்படும் தீபங்களுள் பின்வருவன அடங்கும்:[2]

இவையன்றி பதினாறு வகைத் தீபங்களும் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

  1. தூபம்
  2. மஹாதீபம் -
  3. அலங்கார தீபம்
  4. நாக தீபம்
  5. விருட்சப தீபம் - விருஷ தீபம்
  6. புருஷா மிருக தீபம்
  7. ஓல தீபம்
  8. கமடதி தீபம் - கமபதி தீபம்
  9. கனு தீபம் - கஜ தீபம்
  10. வியாண்யர தீபம் - வியாக்ர தீபம்
  11. இம்ம தீபம் - சிம்ஹ தீபம்
  12. துவஜ தீபம்
  13. மயூர தீபம்
  14. ஐந்தட்டு தீபம் - பூரண தீபம்
  15. நட்சத்திர தீபம்
  16. மேரு தீபம்.[3]

அடிக்குறிப்புகள் தொகு

  1. கைலாசநாதக்குருக்கள், கா., 2009. பக். 145
  2. கைலாசநாதக்குருக்கள், கா., 2009. பக். 150
  3. http://temple.dinamalar.com/news_detail.php?id=3122

உசாத்துணைகள் தொகு

  • கைலாசநாதக்குருக்கள், கா., சைவத் திருக்கோவிற் கிரியை நெறி, பேராசிரியர் பிரம்மசிறீ கைலாசநாதக் குருக்கள் ஞாபகார்த்த சபை, யாழ்ப்பாணம். 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபாராதனை&oldid=2876399" இலிருந்து மீள்விக்கப்பட்டது