தெமோதரை

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள இடம்

6°54′54″N 81°2′59″E / 6.91500°N 81.04972°E / 6.91500; 81.04972

தெமோதரை

தெமோதரை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
அமைவிடம் 6°54′N 81°03′E / 6.9°N 81.05°E / 6.9; 81.05
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 911.6 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

தெமோதரை (Demodera) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் எல்லை, உடுவரை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இவ்வூர் தேயிலைத் தோட்டங்களுக்கு புகழ் பெற்றதாகும். இங்கே இலங்கையில் வேறெங்கும் காணமுடியாத புகையிரதப் பாலமும், மலையை சுற்றும் குகையும் அமைந்துள்ளது. இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டங்களில் தொழில் செய்ய இந்த இடத்தில் குடியேறியவர்களுக்கு இப்பிரதேசம் தென் மதுரையை ஞாபகப்படுத்தியதால், அவர்கள் இவ்விடத்துக்கு தென் மதுரையென பெயரிட்டனர், பின்னர் இது தெமொதறையென மருவிற்று. [மேற்கோள் தேவை]

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமோதரை&oldid=2987555" இலிருந்து மீள்விக்கப்பட்டது