தெம்பே யானை பூங்கா

பாதுகாக்கப்பட்ட இடம்

தெம்பே யானை பூங்கா (Tembe Elephant Park) என்பது தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நதால் பகுதியிலுள்ள மாபுடாலாந்தில் அமைந்துள்ள 30 012 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள விளையாட்டு இருப்பு ஆகும். இது என்துமோ விளையாட்டு வனச்சரகம் அருகில் உள்ளது. இந்த பூங்கா தெம்பே பழங்குடி ஆணையம் மற்றும் எசிம்வெலோ வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பால் உருவாக்கப்பட்டது.

தெம்பே யானை பூங்கா
தெம்பே யானை பூங்கா, அக்டோபர் 2013
அமைவிடம்குவாசுலு-நதால், தென்னாப்பிரிக்கா
அருகாமை நகரம்டர்பன், தென்னாப்பிரிக்கா
ஆள்கூறுகள்27°02′55″S 32°25′20″E / 27.0486°S 32.4222°E / -27.0486; 32.4222
பரப்பளவு30,012 ha (115.88 sq mi)
நிறுவப்பட்டது1983
நிருவாக அமைப்புஎசிம்வெலோ கேஇசட்என் காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு

மபுடாலாந்து மற்றும் தெற்கு மொசாம்பிக் இடையே இடம்பெயர்ந்த யானைகளைப் பாதுகாப்பதற்காக 1983 இல் இது நிறுவப்பட்டது. இந்த யானைகள் மொசாம்பிக்கில் உள்நாட்டுப் போரின் போது வேட்டையாடப்பட்டது. எனவே பூங்கா 1991 இல் மட்டுமே பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இப்போது பூங்காவில் 250 யானைகள் உள்ளன. அவை உலகிலேயே பெரியவை. தெற்கு அரைக்கோளத்தில் வாழும் மிகப்பெரிய யானையான ஐசிலோ 2014 இல் இறந்தது [1]

இதே குழுவில் இருந்த மேலும் 200 யானைகள் மொசாம்பிக்கில் உள்ள மபுடோ யானைகள் காப்பகத்தில் வாழ்கின்றன. 340 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இந்தப் பூங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[2] இந்த பூங்கா உசுத்து- தெம்பே-புட்டி பாதுகாப்புப் பகுதியில் சேர்க்கப்பட உள்ளது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெம்பே_யானை_பூங்கா&oldid=3939612" இலிருந்து மீள்விக்கப்பட்டது