நக்கீரன் (இதழ்)
நக்கீரன் சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் இதழாகும். இதனுடைய முதல் பதிப்பு 1988-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் நாள் வெளியானது. நக்கீரன் கோபால் என்றழைக்கப்படும் ஆர். கோபால் இந்த இதழைத் தொடங்கினார்.
இடைவெளி | வாரம் இருமுறை |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | http://www.nakkheeeran.com/ |
இவ்விதழின் பெயர் கே. சுப்பு என்பவரிடம் இருந்து கோபாலால் வாங்கப்பட்டது.[1] 1989-ம் ஆண்டு தேர்தல் கணிப்பினால் புகழ்பெறத்துவங்கியது. அதன்பிறகு சந்தனமரக் கடத்தல் வீரப்பன் உடன் நடந்த உரையாடல்கள், நேர்காணல்கள் காரணமாக இவ்விதழ் பிரபலமானது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "நக்கீரன் வரலாறு". நக்கீரன் இம் மூலத்தில் இருந்து 2012-05-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120509053536/http://www.nakkheeeran.com/users/frmAbout.aspx. பார்த்த நாள்: மே 23, 2012.