நரசிங்கன்பேட்டை திரௌபதியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நரசிங்கன்பேட்டை திரௌபதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், நரசிங்கன்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு திரௌபதியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:தேவாங்கா கீழவீதி, நரசிங்கன்பேட்டை, திருவிடைமருதூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவிடைமருதூர்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
தாயார்:திரௌபதியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தீமிதி திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் திரௌபதியம்மன் சன்னதியும், கமலக்கன்னி, முத்தால் ராவுத்தர், அரவான் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)