நல்லாப்பிள்ளை பாரதம்
நகுடன் கதை பொருள்
நல்லாப்பிள்ளை பாரதம் தமிழ் வைணவக் காப்பியங்களுள் ஒன்று. இது தமிழ்நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நல்லாப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. வியாச பாரதம் முழுதையும் தமிழில் பாடிய நல்லாப்பிள்ளை மூலநூலில் உள்ளவாறே பதினெட்டுப் பருவங்களையும் 132 சருக்கங்களில் 14000 பாடல்களால் பாடியிருக்கிறார். வில்லிபாரதத்தில் உள்ள பாடல்களில் பெரும்பாலானவற்றை தனது நூலில் அப்படியே கையாண்டுள்ள இவர் வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடாமல் விட்ட கதைப்பகுதிகள் முழுதையும் பாடியுள்ளார். அத்தோடன்றி வில்லிபுத்தூர் ஆழ்வார் சுருக்கமாகப் பாடிய பகுதிகளையும் விவரித்துப் பாடியுள்ளார். எனவே நல்லாப்பிள்ளை பாரதத்தில் வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதமும் அடக்கம் எனலாம். [1]இதன் மூலச்சுவடி தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உள்ளது.[சான்று தேவை]
மேற்கோள்கள்தொகு
மேலும் பார்க்கதொகு
- வில்லிபாரதம்
- தமிழ்ப் பல்கலைக்கழக மூலச்சுவடி