நவநீதம் கருநாடக இசையின் 40வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 40வது இராகத்திற்கு நபோமணி என்ற பெயர்.

இலக்கணம் தொகு

 
நவநீதம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி112 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம21 ரி1
  • ரிஷி என்றழைக்கப்படும் 7வது சக்கரத்தில் 4 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு விவாதி மேளம்.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் வனஸ்பதி (04) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள் தொகு

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி லேமி தெல்ப பெத்த தியாகராஜ சுவாமிகள் ஆதி
கிருதி சாமி இதே நல்லசமயம் கோடீஸ்வர ஐயர் ரூபகம்
கிருதி உமாபதி பாஹி மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ரூபகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவநீதம்&oldid=1400220" இலிருந்து மீள்விக்கப்பட்டது