நவீன் மனோகரன்

நவீன் மனோகரன் (Navin Manogaran) எனும் ம. நவீன், (பிறப்பு: 31 ஜூலை 1982) மலேசியத் தமிழ் எழுத்தாளரும், இதழியலாளரும் ஆவார். இவர் வல்லினம் இணைய இதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார்.[1] இவர் 2019-ஆம் ஆண்டில் எழுதிய சர்ச்சைக்குரிய 'பேய்ச்சி' நாவலுக்கு; மலேசிய அரசாங்கம் 2020-ஆம் ஆண்டில் தடை விதித்தது.[2][3][4] அந்தத் தடைக்கு மலேசிய, தமிழக அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்தன.[5]

நவீன் மனோகரன்
Navin Manogaran
பிறப்பு(1982-07-31)31 சூலை 1982
லூனாஸ், கெடா, மலேசியா
தொழில்ஆசிரியர், எழுத்தாளர்
மொழிதமிழ், ஆங்கிலம், மலாய்
தேசியம்மலேசியர்
காலம்1998–இன்று வரையில்
வகைபுதினம், சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர், கவிஞர்
கருப்பொருள்மெய்யியல், இலக்கியம், வரலாறு, உளவியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சர்வம் பிரமாஸ்மி
மண்டை ஓடி
போயாக்
கடக்க முடியாத காலம்
மகாராணியின் செக் மெட்
மீண்டு நிலைத்த நிழல்கள்
மனசிலயோ
உலகின் நாக்கு
இணையதளம்
vallinam.com.my/navin/

தமிழ் வாசகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்த படைப்புகளை இவர் எழுதி உள்ளார். இவரின் புனைவுகளில் மலேசியச் சூழலில்; மலேசியத் தமிழர்களின் வாழ்வியல் தடங்கள் பிணைந்து இருப்பதைக் காணலாம்.[6]

வாழ்க்கைக் குறிப்புகள் தொகு

மலேசியாவில், கெடா, லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை 'வெல்லஸ்லி லுனாஸ்' தோட்டத் தமிழ்ப் பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை லுனாஸ் இடைநிலைப் பள்ளியிலும் முடித்தார். தந்தையார் மனோகரன். தாயார் பேச்சாய். இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். இவருக்கு ஒரு சகோதரி உண்டு.

இவரின் 16 வயதில் எழுத்தாளர் எம். ஏ. இளஞ்செல்வனின் நட்புக் கிடைக்க வாசிக்கும் பழக்கத்தில் ஈடுபாடு உருவானது. இவரின் இலக்கியப் பயணத்துக்கு எழுத்தாளர் இளஞ்செல்வன் தூண்டுகோலாக இருந்தார். பின்னர் இவர் கோலாலம்பூர் மாநகரத்திற்கு இடம் பெயர்ந்தார்.

ஈடுபாடுகள் தொகு

பணி தொகு

2002-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் அந்தத் துறையில் பட்டயம் பெற்று, பத்துமலை தமிழ்ப்பள்ளி, மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சேவையாற்றினார். அதைத் தொடர்ந்து தற்போது கோலா சிலாங்கூர், சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்தில் முதுகலை முடித்துள்ளார்.

இதழியல் ஈடுபாடு தொகு

  • 'மன்னன்' எனும் ஜனரஞ்சக மாத இதழில் ம.நவீன் சுமார் ஈராண்டுகள் இயங்கினார்.
  • 'காதல்' எனும் இலக்கிய மாத இதழுக்கு இணை ஆசிரியராகப் பொறுப்பெடுத்தார். அவ்விதழ் சுமார் 10 மாதங்கள் வெளிவந்தன.
  • 'வல்லினம்' மாற்று இலக்கிய முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு 2007இல் அச்சிதழாகத் தொடங்கினார். இவ்விதழ் 2009 முதல் இணைய இதழாகத் தொடர்கிறது.
  • 'பறை' எனும் ஆய்விதழ் இவரின் மேற்பார்வையில் 2014 தொடங்கி காலாண்டிதழாக வெளிவந்து 6 இதழ்களுடன் நின்றது. மலாய்/ சீன இலக்கியம், ஆற்றுகை, ஈழ இலக்கியம், குடிமை, உலக இலக்கியச் சிறப்பிதழ் என ஒவ்வொரு தலைப்பின் கீழ் முழு ஆய்வுகளோடு இதழ் தயாரிக்கப்பட்டது.
  • 'முகவரி' எனும் இருவார நாளிதழுக்கு ஆசிரியராக இருந்தார். தமிழ் நேசன் நிர்வாகத்தின் கீழ் வெளிவந்தது. இந்த இருவார நாளிதழ் ஐந்து வெளியீடுகளோடு நின்றது.

இலக்கியச் செயல்பாடுகள் தொகு

  • 2009-2018 காலப்பகுதியில் நண்பர்களின் ஒத்துழைப்புடன் கலை இலக்கிய விழா எனும் நிகழ்வின் வழி மலேசிய, சிங்கப்பூர் ஆளுமைகளை அறிமுகம் செய்து வந்து உள்ளார்.[சான்று தேவை]
  • ஓவியக் கண்காட்சி, நிழல்படக் கண்காட்சி, மேடை நாடகம், புத்தக வெளியீடுகள் என கலையில் பல தளங்களிலும் இவர் செயல்பட்டு வருகிறார்.[சான்று தேவை]
  • இதுவரை 14 மலேசிய  - சிங்கப்பூர் ஆளுமைகளின் ஆவணப் படங்களை இயக்கியுள்ளார்.[சான்று தேவை]

இலக்கிய ஆக்கங்கள் தொகு

இதுவரை இவர் ஒரு நாவல்; மூன்று கவிதை நூல்கள்; மூன்று சிறுகதை நூல்கள்; மூன்று பத்தி நூல்கள்; மூன்று இலக்கிய விமர்சன நூல்கள்; ஒரு நேர்காணல் தொகுப்பு; மற்றும் ஓர் ஆசிரியர் அனுபவம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பு; ஒரு பயண நூல் என 15 நூல்களை வெளியீடு செய்து உள்ளார்.

பதிப்பாளர் தொகு

வல்லினம் பதிப்பகத்தின் மூலம் இதுவரையில் 39 நூல்களைப் பதிப்பித்து உள்ளார். யாழ் பதிப்பகம் என மாணவர்களுக்கான பதிப்பகம் ஒன்றை உருவாக்கிப் பயிற்சி நூல்களையும்; பாட நூல்களையும் பதிப்பித்து வருகிறார்.

பிற பங்களிப்புகள் தொகு

  • 'ஆவணப்படம்' - மலேசியா, சிங்கப்பூர் எழுத்து ஆளுமைகளின் வாழ்வியலைப் பதிவு செய்யும் நோக்கில் பல எழுத்தாளர்களை நேர்காணல் செய்தார். பின்னர் அந்த நேர்காணல்களை ஆவணப் படங்களாகத் தயாரித்தார். இதுவரை 14 ஆவணப் படங்களைத் தயாரித்து உள்ளார்.

பரிசுகள் / விருதுகள் தொகு

படைப்புகள் தொகு

புனைவுகள் தொகு

  • சர்வம் பிரமாஸ்மி – 2007 (கவிதை நூல்)
  • வெறி நாய்களுடன் விளையாடுதல் – 2013 (கவிதை நூல்)
  • மண்டை ஓடி – 2015 (சிறுகதை தொகுப்பு)
  • போயாக் 2018 (சிறுகதை தொகுப்பு)
  • பேய்ச்சி (2019) நாவல்
  • மகாராணியின் செக் மெட் (2019) கவிதை
  • உச்சை (2020) சிறுகதை தொகுப்பு[8]

அ-புனைவுகள் தொகு

  • கடக்க முடியாத காலம் – 2010 (பத்தி தொகுப்பு)
  • விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு – 2012 (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு)
  • வகுப்பறையின் கடைசி நாற்காலி – 2015 (கட்டுரைத் தொகுப்பு)
  • உலகின் நாக்கு - 2017 (உலக இலக்கிய அறிமுகம்)
  • மீண்டு நிலைத்த நிழல்கள் 2018 (நேர்காணல் தொகுப்பு)
  • நாரின் மணம் 2018 (பத்தி தொகுப்பு)
  • மனசிலாயோ - 2020 (பயண நூல்)
  • மலேசிய நாவல்கள் (2020) தொகுதி 1[9]

திரைத்துறை தொகு

மலேசியத் திரைப்படங்களான ‘ஜெராந்துட் நினைவுகள், மௌனம்’ ஆகியவற்றில் வசனகர்த்தாவாகவும், ‘வெண்ணிர இரவுகள்’ (மலேசியா) , ஜகாட் (மலேசியா), கபாலி (தமிழகம்) போன்ற திரைப்படங்களில் திரைக்கதையை ஒட்டிய பங்களிப்பும் வழங்கியுள்ளார்.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. நிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர்–ம.நவீன்
  2. மலேசிய எழுத்தாளர் ம. நவீனின் பேய்ச்சி நாவல் தடை செய்யப்பட்டு உள்ளது.
  3. மலேசியாவில் பேய்ச்சி நாவலுக்கு தடை
  4. ம.நவீனின் 'பேய்ச்சி' நாவலுக்கு மலேசியா தடை: தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்புக் குரல்!
  5. பேய்ச்சி நாவலைத் தடை செய்த மலேசிய அரசு
  6. வாழ்வனுபவங்களை வரலாற்றோடும் சமகாலத்தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவு
  7. "ம.நவீனுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது – ம.நவீன்". பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
  8. "உச்சை சிறுகதை தொகுப்பு - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
  9. "மலேசிய நாவல்கள் (தொகுதி 1) - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன்_மனோகரன்&oldid=3167512" இலிருந்து மீள்விக்கப்பட்டது