நாட்ராம்பள்ளி வட்டம்

நாட்டறம்பள்ளி வட்டம், தமிழ்நாட்டின் 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டம் ஆம்பூர் வட்டத்தின் இரண்டு குறு வட்டங்களைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது.[2] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் நாட்டறம்பள்ளியில் இயங்குகிறது.

இவ்வட்டம் திருப்பத்தூர் வருவாய் கோட்டத்தில் அமைந்த 4 வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் நாட்டறம்பள்ளி மற்றும் அம்மன்கோயில் என இரண்டு குறு வட்டங்களைக் கொண்டுள்ளது. நாட்டறம்பள்ளி வருவாய் வட்டத்தில் 30 வருவாய் கிராமங்கள் உள்ளது.[3]இவ்வட்டத்தில் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. வேலூர் மாவட்ட வருவாய் நிர்வாகம்
  2. 23 new taluks created in Tamil Nadu
  3. நாட்ராம்பள்ளி வட்டத்தின் 30 வருவாய் கிராமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்ராம்பள்ளி_வட்டம்&oldid=3853067" இலிருந்து மீள்விக்கப்பட்டது