நிலத்தோற்றக் கலை

(நிலத்தோற்றக்கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிலத்தோற்றக் கலை (landscape architecture) என்பது, நிலத்தை வெளி (space) மற்றும் அதிலுள்ள பொருட்களோடு சேர்த்து, பாதுகாப்பான, செயற்திறன் கொண்ட, சுகாதாரமான, மனதுக்கு மகிழ்வு தரக்கூடிய முறையில் ஒழுங்கு படுத்துவது தொடர்பானதாகும் என்று கூறப்படுகின்றது. இது, கட்டிடங்கள், நில அமைப்பு, நீர், தாவரவகைகள் போன்றவற்றுக்கு இடையேயான தொடர்புகளை வடிவமைக்கும் கலையாகும். நிலத்தோற்றக் கலைஞர்களின் அமெரிக்க சமூகம் (American Society of Landscape Architects), நிலத்தோற்றக் கலை தொடர்பாகப் பின்வருமாறு விவரம் தரும்போது, இத் துறையானது, அயற்சூழல், நகரங்கள், பெருநகரங்கள், ஆகியவற்றின் சூழலை வடிவமைப்பதுடன், இதன் நோக்கம், காடு, வயல், ஆறு மற்றும் கடற்கரைகள் அடங்கிய இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது, அவற்றை மேலாண்மை செய்வது ஆகியவற்றையும் உள்ளடக்குவதாகக் கூறுகிறது.

நியூ யார்க், மான்ஹட்டனிலுள்ள மத்திய பூங்கா. ஏனைய பல பூங்காக்களைப் போலவே இதுவும் நிலத்தோற்ரக்கலையில் ஒரு ஆக்கம் ஆகும்.

கட்டிடங்களைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளைத் தாவரங்கள், நடைபாதைகள், நீர் அமைப்புக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வடிவமைப்பதுடன், பொதுச் சதுக்கங்கள், ஊடுபாதைகள், பூங்காக்கள், நெடுஞ்சாலையை அண்டிய சூழல்கள், ஆகியவற்றைக் கவர்ச்சிகரமாக ஆக்குவதிலும் நிலத்தோற்றக் கலை பெரும்பங்கு வகிக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலத்தோற்றக்_கலை&oldid=2245337" இலிருந்து மீள்விக்கப்பட்டது