நீர்வளூர்

காஞ்சிபுரம் மாவட்ட சிற்றூர்

நீர்வளூர் (Neervalur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சீபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, இந்த சிற்றூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. இங்கு 500அண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான இலட்மி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுவாலா நரசிம்மர் சன்னதியும் உள்ளது.

நீர்வளூர்
சிறீ பாசியபுரம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மொழிகள்
 • அதிகார்ப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-21

தொன்மம் தொகு

இது கடந்த காலத்தில் ஸ்ரீ பாஷ்யபுரம் என்றும் அழைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இது இராமானுசரால் எழுதப்பட்ட ஸ்ரீ பாஷ்யத்தை நினைவூட்டுகிறது.[1] இன்றும் இங்குள்ள கோயில் அகோபில மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Sri Lakshmi Narayana Perumal Temple, Neervalur, Kanchipuram". columbuslost.com. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்வளூர்&oldid=3862373" இலிருந்து மீள்விக்கப்பட்டது