ந. க. மங்கள முருகேசன்

தமிழக எழுத்தாளர்

ந. க. மங்கள முருகேசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 36 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் துணுக்குகள், பேட்டிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் 150க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது தொகு

இவர் எழுதிய இரண்டு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.

  1. இவர் எழுதிய "சுற்றுச்சூழல் பாதுகாப்பு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  2. இவர் எழுதிய "தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._க._மங்கள_முருகேசன்&oldid=3614147" இலிருந்து மீள்விக்கப்பட்டது