பங்காரு லட்சுமண்
இந்திய அரசியல்வாதி
பங்காரு லட்சுமண் (மார்ச் 17, 1939 – மார்ச் 1, 2014[1]) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒர் இந்திய அரசியல் பிரமுகர். இவர் இந்திய அரசின் இரயில்வே துறை அமைச்சராக 1999-2000 ஆண்டுகளில் இருந்துள்ளார். அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான இவருக்கு, தெகல்கா ஊழல் வழக்கின் காரணமாக நான்காண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.[2]
பங்காரு லட்சுமண் | |
---|---|
மத்திய இராஜாங்க அமைச்சர், இரயில்வே துறை | |
பதவியில் 1999–2000 | |
தேசியத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் 2000–2001 | |
முன்னவர் | குஷபாவு தாக்கரே |
பின்வந்தவர் | ஜனா கிருஷ்ணமூர்த்தி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஆந்திரப் பிரதேசம்இந்தியா | 17 மார்ச்சு 1939
இறப்பு | 1 மார்ச்சு 2014 | (அகவை 74)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | சுசீலா |
பிள்ளைகள் | 3 மகன்களும் ஒரு மகளும் |
சமயம் | இந்து |
தனி வாழ்க்கை தொகு
இவர் ஆந்திராவின் மடிகா தலித் இனத்தவர், ஐதராபாத்தில் இளங்கலையும் சட்டமும் பயின்றவர். இவருடைய துணைவியாரான சுசீலா பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலூர் தொகுதியிலிருந்து 14-வது மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "BJP leader Bangaru Laxman passes away". டி.என்.ஏ. 1 மார்ச் 2014 மாலை 6 மணி. http://www.dnaindia.com/india/report-bjp-leader-bangaru-laxman-passes-away-1966029. பார்த்த நாள்: 1 மார்ச் 2014.
- ↑ "Bangaru Laxman sent to 4 years in jail". டி.என்.ஏ. 29 ஏப்ரல் 2012. http://www.dnaindia.com/india/report-bangaru-laxman-sent-to-4-years-in-jail-1682067. பார்த்த நாள்: 1 மார்ச் 2014.