பங்காரு லட்சுமண்

இந்திய அரசியல்வாதி

பங்காரு லட்சுமண் (மார்ச் 17, 1939 – மார்ச் 1, 2014[1]) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒர் இந்திய அரசியல் பிரமுகர். இவர் இந்திய அரசின் இரயில்வே துறை அமைச்சராக 1999-2000 ஆண்டுகளில் இருந்துள்ளார். அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான இவருக்கு, தெகல்கா ஊழல் வழக்கின் காரணமாக நான்காண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.[2]

பங்காரு லட்சுமண்
மத்திய இராஜாங்க அமைச்சர், இரயில்வே துறை
பதவியில்
1999–2000
தேசியத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
2000–2001
முன்னவர் குஷபாவு தாக்கரே
பின்வந்தவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி
தனிநபர் தகவல்
பிறப்பு (1939-03-17)17 மார்ச்சு 1939
ஆந்திரப் பிரதேசம்இந்தியா
இறப்பு 1 மார்ச்சு 2014(2014-03-01) (அகவை 74)
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சுசீலா
பிள்ளைகள் 3 மகன்களும் ஒரு மகளும்
சமயம் இந்து

தனி வாழ்க்கை தொகு

இவர் ஆந்திராவின் மடிகா தலித் இனத்தவர், ஐதராபாத்தில் இளங்கலையும் சட்டமும் பயின்றவர். இவருடைய துணைவியாரான சுசீலா பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலூர் தொகுதியிலிருந்து 14-வது மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "BJP leader Bangaru Laxman passes away". டி.என்.ஏ. 1 மார்ச் 2014 மாலை 6 மணி. http://www.dnaindia.com/india/report-bjp-leader-bangaru-laxman-passes-away-1966029. பார்த்த நாள்: 1 மார்ச் 2014. 
  2. "Bangaru Laxman sent to 4 years in jail". டி.என்.ஏ. 29 ஏப்ரல் 2012. http://www.dnaindia.com/india/report-bangaru-laxman-sent-to-4-years-in-jail-1682067. பார்த்த நாள்: 1 மார்ச் 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்காரு_லட்சுமண்&oldid=3676772" இருந்து மீள்விக்கப்பட்டது