பசோரி சிங் மசுரம்

இந்திய அரசியல்வாதி

பசோரி சிங் மசுரம் (Basori Singh Masram) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று மாண்ட்லா மாவட்டத்தின் துகாரியா கிராமத்தில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் மண்டலா மக்களவைத் தொகுதியில் இருந்து 15 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

பசோரி சிங் மசுரம்
Basori Singh Masram
நாடாளுமன்ற உறுப்பினர், பதினைந்தாவது மக்களவை
பதவியில்
20092014
முன்னையவர்பக்கன் சிங் குலாசுதே
பின்னவர்பக்கன் சிங் குலாசுதே
தொகுதிமண்டலா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிபச்சாக்கு [1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1945-11-29)29 நவம்பர் 1945
துகாரியா, மண்டலா (மத்திய பிரதேசம்)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்
இயீரா பாய் (தி. 1970)
பிள்ளைகள்2 மகள் மற்றும் 2 மகன்
பெற்றோர்s
  • திராச்சு சிங் மசுரம் (father)
  • பத்தாபாய் மசுரம் (mother)
வாழிடம்(s)போதர், கரஞ்சியா, மாவட்டம். திந்தோரி
கல்விபத்தாம் வகுப்புக்கு கீழ்
முன்னாள் கல்லூரிமேல்நிலைப் பள்ளி, பிச்சியா
As of 9, 2012
மூலம்: [[2]]

இவர் இதற்கு முன்பு கரஞ்சியா கிராம பஞ்சாயத்து போதர் வட்டத்தின் சர்பஞ்சாக இருந்தார். 1993-1998 ஆண்டுகள் காலகட்டத்தில் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

பசோரி சிங் மசுரம் ஒரு விவசாயியாக திண்டோரி மாவட்டத்தில் வசித்தார். இயீரா பாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Madhya Pradesh Assembly Election Results in 1993".
  2. "Detailed Profile". Lok Sabha.
  3. "Election Commission of India-General Elections 2009 Results". பார்க்கப்பட்ட நாள் 14 February 2012.
  4. "Fifteenth Lok Sabha Member's Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 14 February 2012.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசோரி_சிங்_மசுரம்&oldid=3816944" இலிருந்து மீள்விக்கப்பட்டது