ம. பதஞ்சலி சாஸ்திரி
மண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி (சனவரி 4, 1889 – 16 மார்ச் 1963) என்பவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது உச்சி நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951 முதல் சனவரி 3, 1954 வரை இருந்தவர்.[2] தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரில் பிறந்தார்.[3]
எம். பதஞ்சலி சாஸ்திரி M. Patanjali Sastri | |
---|---|
![]() | |
இந்தியாவின் 2-வது தலைமை நீதிபதி | |
பதவியில் 7 நவம்பர் 1951 – 3 சனவரி 1954 | |
நியமித்தவர் | இராசேந்திர பிரசாத் |
முன்னவர் | எச். ஜே. கனியா |
பின்வந்தவர் | மெகர் சண்ட் மகாஜன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சனவரி 4, 1889 மண்டகொளத்தூர், சென்னை மாகாணம் (இன்றைய திருவண்ணாமலை, தமிழ்நாடு, இந்தியா)[1] |
இறப்பு | 16 மார்ச்சு 1963 தில்லி, இந்தியா | (அகவை 74)
வாழ்க்கை துணைவர்(கள்) | எம். காமாட்சி அம்மாள் |
பிள்ளைகள் | 7 |
சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மூத்த சமசுகிருத பண்டிதர் கிருஷ்ண சாஸ்திரியின் மகனாக பதஞ்சலி சாஸ்திரி பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து கலையிலும் சட்டத்திலும் பட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் ஆற்றி வந்தார். சில காலம் கழித்து மார்ச்சு 15, 1939இல் உயர்நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திசம்பர் 6, 1947இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951இல் பொறுப்பேற்றார். இப்பதவியில் சனவரி 3, 1954 வரை பணியாற்றினார்.[4]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Sastri was first Tamilian Supreme Court Chief Justice". The New Indian Express. 3 July 2013. http://newindianexpress.com/cities/chennai/Sastri-was-first-Tamilian-Supreme-Court-Chief-Justice/2013/07/03/article1664712.ece.
- ↑ "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.சதாசிவம்". தினமணி. 30 சூன் 2013. சூலை 23, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Sastri was first Tamilian Supreme Court Chief Justice". newindianexpress. சூலை 3, 2013. சூலை 23, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "M. Patanjali Sastri". supremecourtofindia.nic.in. 23 சூலை 2013 அன்று பார்க்கப்பட்டது.