பயம்

ஒரு உணர்வு

பயம் (fear) என்பது அச்சத்தை வெளிப்படுத்தும் ஓர் உணர்ச்சிவயப்பட்ட வெளிப்பாடாகும். இதன் அடிப்படை வழிமுறையானது வலி அல்லது ஆபத்தின் அச்சுறுத்தல் போன்ற பிரத்யேகத் தூண்டலின் மூலமாக விளைகிறது. பயம் என்பது அடிப்படையான அல்லது உள்ளார்ந்த மன உணர்வுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றாக உள்ளது என ஜான் பீ. வாட்சன், பிரெட்டஸ்-மெஹல்ஹெஸ், ராபர்ட் ப்லட்சிக் மற்றும் பால் எக்மன் போன்ற சில உளவியலாளர்கள் கூறுகின்றனர். மகிழ்ச்சி, துக்கம் மற்றும் கோபம் போன்ற மன உணர்ச்சிகளும் இந்த வெளிப்பாடுகளில் அடங்கியுள்ளன. பயம் கண்டிப்பாக மனக்கலக்கம் தொடர்பான உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்து தனிப்பட்டு இருக்க வேண்டும். குறிப்பாக மனக்கலக்கம் என்பது வெளிப்புற அச்சுறுத்தல் ஏதும் இல்லாமல் ஏற்படக்கூடியதாகும். மேலும் பயமானது தப்பித்துக் கொள்ளல் மற்றும் தவிர்த்தல் போன்ற பிரத்யேக நடத்தைகளை ஒத்துள்ளது. ஆதலால் மனக்கலக்கம் என்பது கட்டுப்படுத்த முடியாத அல்லது தவிர்க்க முடியாத ஒன்றாக உணரக்கூடிய அச்சுறுத்தல்களின் விளைவாக ஏற்படுகிறது.[1] பயம் என்பது மோசமான சூழல் அல்லது தொடரும் ஏற்கமுடியாத சூழல் போன்ற பெரும்பாலும் வருங்கால நிகழ்வுகளை எண்ணியே ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பயமானது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விசயத்திற்கான உடனடி சலனம் ஆகும்.

சொற்பிறப்பியல் தொகு

பழைய ஆங்கிலச் சொல்லான fear என்பது பேரிடர் அல்லது பேரழிவு மூலமாக ஏற்படும் உணர்ச்சி யை குறிப்பிடாமல், அந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தது. இடைக்காலத்தில் இடைக்கால ஆங்கிலத்தில் "பயத்தின் உணர்வு" என்ற பொருளில் "fear" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு எழுதப்பட்டதே முதல் பதிவாக இருந்தது. இது சுமார் 1290 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. பழைய ஆங்கிலத்தில் “பயமுறுத்துவது, எதிர்பாராத விதமாய் அச்சமூட்டுவது” எனப் பொருள்படும் frighten என்ற வினைச்சொல் இருப்பதே "fear" என்ற வார்த்தையின் பொருள் மாறியதற்குக் காரணமுள்ள மிகவும் சாத்தியமான விளக்கமாக இருக்கிறது.[2]

விவரிப்பு தொகு

 
சார்லஸ் டார்வினின் த எக்ஸ்பிரசன் ஆஃப் த எமோசன்ஸ் இன் மேன் அண்ட் அனிமல்ஸில் பயம் காரணமான முக பாவனை சார்லஸ் டார்வின் தனது புத்தகமான த எக்ஸ்பிரசன் ஆஃப் தி எமோசன்ஸ் இன் மேன் அண்ட் அனிமல்ஸின் மூலமாக பயத்தைப் பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறார்

கண்களை விரித்துக்காட்டுவது (அடுத்து என்ன நடக்கும் என முன்கூட்டியே எதிர்பார்க்கும் போது); கண்கள் உறைந்து விரிவது (மிகவும் வெளிச்சத்தை கண்களுக்குள் எடுத்துக் கொள்வது); மேலுதடு உயர்வது, கண் இமைகள் சுருங்குவது மற்றும் உதடுகள் கிடைமட்டமாக விரிவடைவது உள்ளிட்ட முக பாவனைகள் பயத்தினால் ஏற்படுகின்றன. பயத்தின் உளவியல் விளைவுகளை இசைவுடைய பதற்ற வெளிப்பாடுகளின் கண்ணோட்டத்தில் இருந்துச் சிறப்பாக அறிந்து கொள்ளலாம் (சண்டையிடுதல் அல்லது தப்பியோடுதல் (fight-or-flight)). இந்த நிலையானது மிகவும் நிதானமான நிலையைக் கொண்ட வெளிப்பாடாகக் கூறப்படுகிறது. உடல்சார்ந்த சண்டையிடுதல்-அல்லது-தப்பியோடுதல் எதிர்வினைக்குத் தயார்படுத்துதலில், உடல்சார்ந்த இயக்கத்திற்குப் பயன்படுகின்ற தசைகள் விறைப்பாகி அதில் ஆக்ஸிஜன் நிரம்புகின்றன. அப்போது உடலின் உள்ளுறுப்பில் இருந்து உடலின் மேற்பகுதிகளுக்கு இரத்தம் பாயாமல் செயலற்றுவிடுவதால் வியர்வை உண்டாகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டங்கள், வெப்பம் ஆகியவற்றுடன் உள்ளுறுப்பில் இருந்து இரத்தம் பாய்வது தடையாவதால் உடலின் எஞ்சிய பகுதிகளுக்கும் மாற்றம் தெரிகின்றன. இவ்விளைவுகளில் இருந்து உடலை குளுமையாக்குவதற்கு வியர்வை உண்டாகிறது. அதிர்ச்சியூட்டுகிற அல்லது திடீர் தூண்டலின் போது, குறிப்பாக உடற்கூறில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளான முகம் மற்றும் தலை போன்ற பகுதிகளை மூடுவதற்கு (அல்லது பாதுகாப்பதற்கு) பொதுவான சலனம் ஏற்படுகிறது. எதிர்பாராதவிதமாய் பயம் ஏற்படும் போது அந்தப் பயத்தின் விளைவாக பாதிக்கப்படுபவருக்கு ஒரு துள்ளலோ அல்லது சிறிய சலனமோ ஏற்படுகிறது. அந்த நபரின் இதயத்துடிப்பு வீதமும் இதயத்துடிப்பும் வேகமடைகிறது.

வகைகள் தொகு

பயம் ஏற்படும் அனுபவத்தைப் பொருத்து மாறுபட்ட வரையறைகளில் பயம் விளக்கப்படுகிறது. மிதமான எச்சரிக்கை முதல் கடுமையான அச்சக் கோளாறு மற்றும் துன்புறு மனநோய் வரை இது மாறுபடுகின்றது. கவலை, மனக்கலக்கம், நடுக்கம், திகில், பீதி மற்றும் அதீத அச்சம் உள்ளிட்ட கூடுதலான புலன் உணர்வு சார்ந்த மற்றும் உணர்ச்சிவயப்பட்ட நிலைகளை சார்ந்து பயம் உணரப்படுகிறது. பயத்தின் அனுபவங்களானது நினைவிழந்த மனதின் வெளிப்பாட்டிற்கு பிறகு நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கிறது. அவை கொடுங்கனவுகளாகவோ அல்லது இரவு நடுக்கங்களின் வலிமையுடைய வடிவமாகவோ கூட வெளிப்படுகிறது. பயமானது மிகப்பெரிய குழு அல்லது சமுதாய அமைப்பில் கூட ஏற்படுகிறது. சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்தும் போது கூட்ட வெறியாக இது மாறுகிறது. பயம் சார்ந்த சில நோயியல்கள் (ஒரேநிலையான பகுத்தறிவுக்கு ஒவ்வாத பயங்களாக வரையறுக்கப்படுகிறது) பல்விதமான மனக்கலக்கச் சீர்குலைவை கொண்டுள்ளன. மேலும் இருமுனை சீர்குலைவின் உச்சநிலை போன்ற பிற மிகவும் மோசமான நோய்மை மற்றும் மூளைக் கோளாறின் சில வகைகள் போன்ற பிற வெளிப்பாடுகளும் இதில் மிகவும் சாதாரணமாகும்.

அவநம்பிக்கையின் அனுபவமானது ஒரு மிதமான பய உணர்ச்சியாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ விளக்கப்படுகிறது. வழக்கமாக இது பழக்கமற்ற அல்லது செயல்திறமிக்க ஆபத்தான மனிதனுக்கு எதிர்விளைவாக ஏற்படுகிறது. சந்தேகத்துக்குரிய அல்லது அடையாளம் தெரியாத யாராவது ஒருவர் அல்லது ஏதாவது ஒன்றின் மேல் ஏற்படும் எச்சரிக்கை உணர்ச்சியின் காரணமாக அவநம்பிக்கை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக அறிமுகம் இல்லாதவரின் மேல் அவநம்பிக்கை கொள்ளும் ஒருவர் முரணான அல்லது வழக்கமற்ற வழியில் அதை வெளிப்படுத்துவார். அதுபோலவே 100-அடி ஆழம் உள்ள முழுவதும் துருப்பிடித்த பழைய பாலத்தின் மீது பாதுகாப்பு காரணமாக ஒருவருக்கு அவநம்பிக்கை வரலாம். சூழ்நிலைக்கான ஒரு ஒத்துப்போகும் தன்மையாக ஆரம்ப எச்சரிக்கை சமிக்ஞையாக அவநம்பிக்கை உண்டாகிறது. இது மிகப்பெரிய பயத்திற்கும் பேரிடருக்கும் வழிவகுக்கிறது. ஆதரவு கொடுப்பதன் மூலம் வழக்கமாக இதைப் போன்ற பயம் படிப்படியாய் குறைகிறது எ.கா. ஒன்றின் மேல் நம்பிக்கையைப் பெறுவதற்கு அடிக்கடி ஒரு செயலைச் செய்வது ஆகும்.

நடுக்கம் என்பது கடுமையாக உச்சரிக்கப்படும் பயத்தின் வடிவமாகும். உடனடியாய் நிகழும் சுய ஆபத்தின் குழப்பமுடைய உணர்வே நடுக்கம் ஆகும். மூளைக் கோளாறின் பொருளை அறிந்து கொள்வதன் மூலமாகவும் இது ஏற்படுகிறது. ஒரு நபர் அறிவுக்குப் பொறுந்தாத தேர்வுகள் மற்றும் பிறழ்வான நடத்தையை மேற்கொள்ளும் போது நடுக்கம் ஏற்படுகிறது. துன்புறு மனநோய் என்பது பயத்தின் உளப்பிணியை விவரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சொல்லாகும். நீண்ட-காலம் நிலைந்திருக்கும் உணர்வுகளாகவும், தொந்தரவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியதாகவும் இது உள்ளது. துன்புறு மனநோய் என்பது அபாயத்தில் இருக்கும் ஒருவரது அறிதல் நிலைகள் அல்லது மிகவும் பிரத்யேகமான திரிபுணர்வுகளுடன் ஒருங்கிணந்த கடுமையான உணர்ச்சிவயப்பட்ட நிலையாகும். ஒருவர் தன்னுடைய வழக்கமான நடத்தையில் இருந்து உச்ச அளவிலான அல்லது தவறான வழிகளில் மாறியுள்ளார் என்பதை பயத்தின் இந்த அலகு சுட்டிக்காட்டலாம்.

பயத்தின் அதிர்வு தொகு

பயம் என்பது வழக்கமாக ஒரு எதிர்மறை மன உணர்ச்சியாகவே அறியப்படுகிறது. ஏதாவது ஒன்றின் மேல் உள்ள பயமாகவோ அல்லது அதனுள்ளேயே அறியப்படும் பயமாகவோ உள்ளது. எதையும் கட்டுப்படுத்தும் திறமை இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றில் கூட பயம் ஏற்படுகிறது. எதிர்பாராதவிதமாய் நம்மிடம் இருந்து பயம் வெளிப்படும் போது அதைப்பற்றிய விழிப்புணர்வே இருப்பதில்லை. அதைப் போன்ற சூழ்நிலைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வோம் என்பதை யூகிக்க முடியும். ஆனால் அந்த நிலைமை நமக்கு வந்தால் நாம் முழுவதும் மாறுபட்ட விதத்தில் அதை எதிர்கொள்வோம். கண்டிப்பாக அதிர்ச்சியை நாடுபவர்கள் பலர் வெளியே உள்ளனர். அவர்கள் அச்சத்தால் செயலிழந்துவிடும் உணர்வை வளர்த்துக்கொள்கின்றனர். உச்ச அளவிலான விளையாட்டுகளிலும் அல்லது பல வணிக நோக்குடைய பூங்காவில் ரோலர்-கோஸ்டர் சவாரியில் அட்ரெனலின் விரைவு ஆகியவற்றிலும் இதனைக் காணலாம். பயத்தில் பல வகைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் அறியப்பட்ட ஒரு காரணத்தின் வெளிப்பாட்டை சார்ந்தே பெரிதும் உள்ளன.

பொதுவான பயங்கள் தொகு

கணக்கெடுப்புகளைப் பொறுத்தவரை சிலந்திகள், பாம்புகள், உயர்வான இடங்கள், நீர், சுற்றுச்சுவருடனான இடங்கள், சுரங்க வழிகள் மற்றும் பாலங்கள், சமுதாயப் புறக்கணிப்பு, தோல்வி மற்றும் பொதுப் பேச்சு போன்ற விசயங்கள் மிகவும் பொதுவான சில பயத்தை உண்டாக்குபவைகளாக உள்ளன. எந்த விசயத்தில் மக்கள் அதிகம் பயப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய சோதனையில், ஆன்லைனில் தேடப்படும் பெரும்பாலான சொற்றொடர்கள் "பியர் ஆஃப்..." என்றே உள்ளது என பில் டேன்சர் ஆய்வுசெய்தார். அவற்றில் பெரும்பாலனவை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு வழிதேடுவதற்காகவே இவ்வகை தேடுதலை நடத்துகின்றனர் என்பது ஊகம் செய்யப்பட்டது. பறத்தல், உயரங்கள், கோமாளிகள், நெருக்கங்கள், இறப்பு, நிராகரித்தல், மக்கள், பாம்புகள், வெற்றி மற்றும் வாகனம் ஓட்டுதல் போன்ற பயங்கள் அவரது சிறந்த பத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[3]

மற்றொரு பொதுவான பயமானது வலியாகவோ அல்லது ஒருவரை காயப்படுத்தும் ஒன்றின் மீதோ இருக்கிறது. இயலக்கூடிய நிலையில் வலியின் பயமானது அஞ்சி விலகுதல் அல்லது இச்சகம் கேட்டல் போன்ற நிலையை உண்டாக்குகிறது. சிலர் இதை விளையாட்டினுள் ஈடுபடுத்துகின்றனர். அவ்வகை விளையாட்டுகளில் ஒருவர் மற்றொவரின் மேல் குத்து விட முயற்சிக்கும் போது அவர் அஞ்சி விலகினால் அவரை அடிக்கின்றனர். அதில் அஞ்சி விலகுதல் என்பது உடல்ரீதியான விளைவுகளை ஏற்படுத்துவதால் இது ஒரு நல்ல யோசனை அல்ல. மேலும் இது மிகவும் உணர்ச்சிமிகுந்ததாக இருப்பதால் அதைப் போன்றே கண்டிப்பாக கையாள வேண்டும்.

2005 கால்அப் என்ற ஒரு தேசிய வாக்கெடுப்பில் (U.S.A.), 13 மற்றும் 15 வயதுகளுடைய இளம் வயதினர் எதன்மேல் மிகவும் பயம் கொள்கிறார்கள் என வினவப்பட்டது. இவ்வினா பொதுவாக அனைவரிடமும் கேட்கப்பட்டது. அங்கு பங்களித்தவர்கள் தாங்கள் விரும்பிய எதையுமே கூறலாம். அந்த வாக்கெடுப்பில் தீவிரவாதமே அதிக பயத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறினர் (8% பதின்பருவத்தினர்கள் குறிப்பிட்டனர்). அதில் சிறந்த பத்து பயங்கள் வரிசைமுறையில் அளிக்கப்பட்டவை பின்வருமாறு: தீவிரவாதத் தாக்குதல்கள், சிலந்திகள், இறப்பு, தோல்வியடைவது, போர், உயரங்கள், குற்றவாளி அல்லது குழு வன்முறை, தனிமையில் இருப்பது, வருங்காலம், அணுஆயுதப்போர் போன்றவை ஆகும்.[4]

 
இராக்கில் உள்ள அபூ ஹரெயிப் சிறையில் ஒரு கைதியைப் பயமுறுத்துவதற்கு ஒரு இராணுவ நாய் பயன்படுத்தப்படுகிறது

காரணங்கள் தொகு

மக்கள் கற்றறிதல் மூலமாக குறிப்பிட்ட பயங்களை வளர்த்துக்கொள்கின்றனர். பயத்தை பக்குவப்படுத்தலாக உளவியலில் இது கற்பிக்கப்படுகிறது. 1920 ஆம் ஆண்டில் ஜான் பீ. வாட்சனின் லிட்டில் ஆல்பெர்ட் எக்ஸ்பிரிமென்ட்டுடன் இது தொடங்கப்பட்டது. இச்சோதனையில் 11 மாத சிறுவனுக்கு ஆய்வகத்தில் உள்ள ஒரு வெள்ளை எலியின் மீதுள்ள பயத்தை பக்குவப்படுத்துவதாக இருந்தது. இதனால் மெல்லிய உரோமம் கொண்ட பிற வெள்ளை உயிரினங்களிடமும் அச்சிறுவனுக்கு பயம் நீங்கியது. இந்த உண்மை உலகில், பயங்கரமான ஊறுவிளைவிக்கும் விபத்தின் மூலமாக பயம் உணரப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு குழந்தை கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அதனால் வெளியே வரமுடியாமல் கஷ்டப்படுகிறது. இதன் மூலம் கிணறுகள், உயரங்கள் (உயர மருட்சி), சுற்றுசூழப்பட்ட வெளிகள் (தனிமை மருட்சி) அல்லது நீர் (நீர் அச்சம்) போன்ற பயங்களை அந்தக் குழந்தை உண்டாக்கிக் கொள்கிறது. அவர்களது மூளையின் பாகங்கள் பயம் சார்ந்த விளைவுகளினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அப்பகுதிகளைப் பார்க்கும் போது (அமிக்டலா (amygdala)), ஒருவர் மனவேதனையை அனுபவித்ததன் காரணமாக பயத்தை உணர்ந்துள்ளனர் என்பதையும் அல்லது மற்றவர்களிடம் இருந்து பயத்தை உணர்ந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம். வெறுப்பான நிகழ்ச்சியை யாராவது ஒருவரிடம் இருந்து கவனித்த ஒருவர் தனக்கும் அதே சிகிச்சை காத்துக்கொண்டிருப்பதை அறியும் போதும், ஏதாவது ஒரு விசயம் பயம்-எரிச்சலுடைய சூழ்நிலையை ஏற்படுத்தும் போதும் அவை அமிக்டலாவை பாதிக்கிறது என ஆன்ட்ரெஸ் ஓல்சன், கேத்தரின் ஐ. நியரிங் மற்றும் எலிசபெத் ஏ. பெல்ப்ஸ் ஆகியோர் நிறைவுசெய்த சோதனை தெரிவிக்கிறது. ஒரு தனிப்பட்ட வரலாற்றில் இருந்து மட்டுமல்லாமல் இருவகையான சூழ்நிலைகளிலும் பயம் உருவாகிறது என்பதை இது அறிவுறுத்துகிறது.

பயமானது வெளியே இருந்து கற்றுக்கொள்ளப்பட்டாலும் மனித இயல்பின் ஒரு பகுதியாகவே உள்ளது. குறிப்பிட்ட பயங்களானது (எ.கா. விலங்குகள், உயரங்கள்) மற்றவைகளைக் காட்டிலும் (எ.கா. பூக்கள், மேகங்கள்) மிகவும் பொதுவானதாக உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆய்வகங்களில் சோதிப்பதற்கு இவ்வகை பயங்கள் மிகவும் எளிதாகவே இருந்தன. இந்தத் தோற்றப்பாடானது ஆயத்தமாயிருத்தல் என அறியப்படுகிறது. ஏனெனில் ஆரம்பகால மனிதர்கள் உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் அதிகம் விரும்பியதால் அபாயகரமான சூழ்நிலைகளில் விரைவாக பயம் கொண்டனர். ஆயத்தமாயிருத்தல் என்பது இயற்கையான தேர்வின் விளைவாக பிறப்புவழி பற்றிய வெளிப்பாடாகவே பாவிக்கப்படுகிறது.

வரலாறு மற்றும் கலாச்சாரத் தாக்கங்களின் மூலமாக பயம் உணரப்படுகிறது. எடுத்துக்காட்டாக 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் பல அமெரிக்கர்கள் இளம்பிள்ளைவாத நோயின் மேல் பயம் கொண்டிருந்தனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் பாகங்கள் ஊனமடையும். அவரது எஞ்சிய வாழ்நாளில் முழுவதுமே உடலின் அப்பகுதி செயல் இழந்து போகும். எவ்வாறு மக்கள் பயத்தை உணருகின்றனர் என்பதில் முரணற்ற கலப்பு-கலாச்சார மாறுபாடுகள் உள்ளன. மக்கள் பயம் மற்றும் பிற மன உணர்ச்சிகளில் முக பாவனையைக் காட்டுகின்றனர் என்பதை டிஸ்ப்ளே ரூல்ஸ் காட்டுகிறது.

நரம்பிய உயிரியல் தொகு

அமிக்டலா என்பது பயத்தின் நரம்பிய உயிரியலில் ஒரு அடிப்படை மூளை அமைப்புமுறையாகும். எதிர்மறை மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இது முக்கியமாகச் செயல்படுகிறது (பயம் மற்றும் கோபம் போன்றவை). நோயாளிகள் அச்சமுடைய முகத்துடன் இருக்கும் போதோ அல்லது ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போதோ அமிக்டலா அதியியக்கத்துடன் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நோயாளிகளிடம் இருக்கும் மிகவும் கடுமையான சமூக வெறுப்பானது அமிக்டலாவின் அதிகப்படியான வெளிபாட்டுடைய தொடர்பைக் காட்டுகிறது.[5] பயம் கொண்ட முகங்களின் படங்கள் அல்லது மற்றொரு மனப்பாங்கில்[6] இருந்து மக்களின் முகங்களைக் கொண்ட விசயங்களில் அமிக்டலாவின் அதிகப்படியானச் செயல்பாட்டை காட்டுவது, இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

அமிக்டலாவின் மூலமாக உருவாகும் பயத்தின் விளைவானது மூளையின் முன் மடலில் அமைந்து இருக்கும் அலகுருமுளைக்குரிய முன்புற சிங்குலேட் ஓடாக அறியப்படும் மற்றொரு மூளைப் பிரதேசத்தின் மூலமாக இடம்பெயர்கிறது. 2006 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில் ஒருவர் மயக்கத்தில் இருக்கும் போது உணரக்கூடிய பயம்கொண்ட உந்தல்களைக் காட்டிலும் அவர் உணர்வுநிலை யில் இருக்கும் போது அறியப்படும் பயத்தின் உந்துதல்களில் அமிக்டலாவின் செயல்பாடு மிகவும் குறைவாகவே இருப்பதை ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உணர்ச்சிவயப்பட்ட கட்டுப்பாடு அலகை குறித்து இயங்கும் அமிக்டலாவின் செயல்பாட்டை தடுப்பதற்கு அலகுருமுளைக்குரிய முன்புற சிங்குலேட் ஓடு செயல்படுவதை அவர்கள் இதன் முந்தைய விசயத்தில் கண்டுபிடித்துள்ளனர்.[7]

பயம்-தொடர்புடைய உந்துதல்களின் செயல்பாட்டில் அமிக்டலாவின் பங்கானது இருபுற பாதிப்படையும் இடங்களின் ஆராய்ச்சி மூலமாக வினவப்படுகிறது. அவர்களது அமிக்டலாவின் இருப்பு இல்லாமல் கூட அவர்கள் பயம்கொண்ட முகங்களை துரிதமாக வெளிப்படுத்துகின்றனர்.[8]

அமிக்டலா செயல்பாட்டின் அடக்கல் நோய் விளைக்கும் நுண்ணுயிர்கள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. டாக்சாப்பிளாசுமம் ஒட்டுண்ணி மூலமாக பாதிக்கப்பட்ட எலிகளானது பூனைகளின் மேல் குறைவான பயத்தையே கொண்டுள்ளன. சில சமயங்களில் இவை அவற்றின் சிறுநீர்-குறியிடப்பட்ட பகுதிகளில் கூட காணப்படுகிறது. இந்த நடத்தையானது அவற்றை பூனைகள் உண்ணுவதற்கு வழிவகுக்கின்றன. பின்னர் இந்த ஒட்டுண்ணி மீண்டும் பூனையின் உடலில் உருவாகிறது. பாதிக்கப்பட்ட எலிகளின் அமிக்டலாவிலேயே ஒட்டுண்ணி கவனம் செலுத்துகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.[9]

பயம் மற்றும் இறப்பு தொகு

இறப்பின் பயமானது சமய ஈடுபாட்டிற்கு தூண்டுகிறது என்ற கருதுகோளை உளவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஒரு மற்றொரு வாழ்க்கை இருப்பது உறுதிபடுத்தும் நம்பிக்கை மூலமாக அந்த பயம் மட்டுப்படுத்தப்படுகிறது. இந்த தலைப்பின் மேலுள்ள அனுபவ ஆராய்ச்சியானது தெளிவற்றேயுள்ளது.[சான்று தேவை] கஹோ மற்று டூனைப் பொறுத்தவரை, நம்பிக்கை கொண்டு சமய சேவைகளில் வாரந்தோறும் கலந்துகொள்ளும் மக்கள் இறப்பின் மேல் குறைவான பயத்தையே கொண்டுள்ளனர். குறைவான சமய நம்பிக்கை கொண்ட மக்கள் அதிகப்படியான கவலைகளைக் கொண்டுள்ளனர். மேலும் சமய நம்பிக்கை இல்லாதவர்கள் இறப்பின் பயத்திற்கு இடைநிலையுடன் இருக்கின்றனர். பல்வேறு கிறிஸ்துவ மதப்பிரிவுகளில் எடுக்கப்பட்ட மக்களின் கணக்கெடுப்பானது இறப்பின் பயம் மற்றும் சமய போதனை சித்தாந்தத்தை பின்பற்றுதல் இவை இரண்டுக்கு இடையேயான நேர்மறையான தொடர்பைக் காட்டுகிறது. மற்றொரு வார்த்தைகளில் கிறிஸ்துவ மத அடிப்படைவாதம் மற்றும் விவிலியத்தின் பிற கண்டிப்பான பொருள் விளக்கங்கள் இறப்பின் பயத்தை மிகையாக ஒருங்கிணைத்துள்ளன. அன்றியும் சில சமய போக்குகளானது பிறர் பயத்தினால் இருப்பதைக் காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.[10]

வெள்ளையை மாதிரியாகக் கொண்ட தரவின் மற்றொரு ஆய்வில் கிறிஸ்துவ ஆண்களும் பெண்களும் மரபுவழியான கருதுகோள்கள் மூலமாக சோதனையிடப்பட்டனர். தேவாலயத்தை மையமாகக் கொண்ட சமய ஈடுபாடு மற்றும் அமைப்புமுறை ஆக்குதல் இல்லாத ஆன்மீக பார்வைகளைத் தேடுவது போன்றவை வயதான காலங்களில் இறப்பின் பயத்தை அணுகும் தெளிவான வழிகளான உள்ளன. சமய ஈடுபாடு மற்றும் ஆன்மீகம் இரண்டுமே நேர்மறையான உளசமூக செயல்பாடுகளுக்கு தொடர்புடையதாக உள்ளன. ஆனால் தேவாலயத்தை மையப்படுத்திய சமய நம்பிக்கையானது இறப்பின் பயத்திற்கு எதிரான விசயங்களில் இருந்து பாதுகாக்கிறது.[11]

இறப்பின் பயமானது இறப்பு கவலை எனவும் அறியப்படுகிறது. பிற கவலைகளைப் போன்றே இதுவும் மிகவும் துல்லியமான விவரமாக இருக்கலாம். இதன் வினாவின் உணர்ச்சிவயப்பட்ட நிலையானது நீண்டு நிலைத்திருக்கிறது மற்றும் குறிப்பிட்ட தூண்டுதலுக்கு தொடர்புடையதாக இருப்பதில்லை. இறப்பின் பயம், இறப்பின் கவலை மற்றும் இறப்புநிலைகளின் மேலுள்ள கவலைகளின் பகுப்பாய்வில் இருத்தல் கொள்கை மற்றும் பயங்கர மேலாண்மைக் கோட்பாடு போன்றவை முக்கிய இடங்களை வகிக்கிறது.

மேலும் காண்க தொகு

குறிப்புதவிகள் தொகு

  1. ஓமன், ஏ. (2000.) பியர் அண்ட் அனெக்சிட்டி: எவோல்சனரி, காக்னிட்டிவ், அண்ட் கிலினிக்கல் பெர்ஸ்பெக்டிவ்ஸ். இன் எம். லீவிஸ் & ஜே. எம். ஹாவிலேன்ட்-ஜோன்ஸ் (பதிப்புகள்). ஹேன்ட்புக் ஆஃப் எமோசன்ஸ். (பப.573–593). நியூ யார்க்: த கில்போர்டு பிரஸ்.
  2. த அமெரிக்கன் ஹெரிட்டேஜ் டிக்சனரி ஆஃப் த இங்கிலிஷ் லாங்குவேஜ், நான்காவது பதிப்பு, 2000, ஹக்டன் மிலிஃப்லின் நிறுவனம்.
  3. டேன்சர், பீ. (2008). கிலிக்: வாட் மில்லியன்ஸ் ஆஃப் பியூப்பில் ஆர் டூயிங் ஆன்லைன் அண்ட் ஒய் இட் மேட்டர்ஸ் . நியூயார்க்: ஹைபெரியன்.
  4. காலப் வாக்கெடுப்பு: அமெரிக்காவின் இளைய சமுதாயத்தை எது பயம்கொள்ளச் செய்கிறது, மார்ச் 29, 2005 நவம்பர் 24, 2008 அன்று பெறப்பட்டது.
  5. சமூக அச்சக்கோளாறு நோய்குறைக்கு உதவும் மூளை செயல்பாட்டை ஆய்வுசெய்தல். மோனஷ் பல்கலைக்கழகம். ஜனவரி 19, 2006.
  6. டிஃப்ரென்சியல் ரெஸ்பான்ஸ் இன் த ஹியூமன் அமிக்டலா டூ ரேசியல் அவுட்குரூப் விசஸ் இன்குரூப் பேஸ் ஸ்டிமுலி. PubMed
  7. மூளையின் பய விளைவான உணர்ச்சிவயப்படலைக் கட்டுப்படுத்தும் சுற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரணிடப்பட்டது 2010-03-17 at the வந்தவழி இயந்திரம். மே 14, 2008 அன்று பெறப்பட்டது.
  8. டிசச்சியா என், மொரடி எஃப், ஃபெல்சன் சீ, யமஜகி எம், அடோல்ப்ஸ் ஆர். (2009). அமிக்டலாவின் உளதாம்தன்மை இல்லாமல் பயம்கொண்ட முகங்களின் முழுமையான துரித உணர்வு. நாட் நியூரோசி. 12:1224-12225. PubMed
  9. பெர்டாய் எம், வெஸ்டெர் ஜே, மெக்டொனால்டு டி (2000). டாக்சோபிளாஸ்மா கோண்டியுடன் பாதிக்கப்பட்ட எலிகளின் மரணம் விளைவிக்கக்கூடிய ஈர்ப்பு புரொசீடிங் ஆஃப் த ராயல் சொசைட்டி ஆஃப் லண்டன், பு267:1591–1594 . PubMed எஆசு:10.1038/nn.2380
  10. கஹோ, ஆர். டி., & டன், ஆர். எஃப். (1976). இறப்பின் பயம் மற்றும் சமயம் சார்ந்த நடத்தைகள் மற்றும் ஒழுங்குகள், ஜர்னல் ஃபார் த சைன்டிபிக் ஸ்டடி ஆஃப் ரிலீஜியன் , 14 , 379–382.
  11. விங்க், பீ. (2006). யார் இறப்பிற்கு பயப்படுவது? சமய நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் முதிர்ந்த வயதில் இறப்புக் கவலை. ஜர்னல் ஆஃப் ரிலீஜியன், ஸ்பிரிட்சுவாலிட்டி, & ஏஜிங் , 18 , 93–110.

கூடுதல் வாசிப்பு தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயம்&oldid=3617705" இலிருந்து மீள்விக்கப்பட்டது