பர்வானி சமஸ்தானம்

பர்வானி சமஸ்தானம் (Barwani State) [1] 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கில், சாத்பூரா மலைத்தொடரில், நர்மதை ஆற்றின் தெற்கில் அமைந்த பர்வானி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது.

பர்வானி சமஸ்தானம்
बड़वानी रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
836–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பர்வானி
Location of பர்வானி
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் பர்வானி சமஸ்தானம்
தலைநகரம் பர்வானி
வரலாறு
 •  நிறுவப்பட்டது 836
 •  1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1941 3,051.02 km2 (1,178 sq mi)
Population
 •  1941 76,666 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் பர்வானி மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
Barwani Princely State
இரண்டாம் உலகப் போரின் போது, பிரான்சு நாட்டின் மேர்வில் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் பர்வானி மன்னர் இரஞ்சித் சிங்

1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பர்வானி இராச்சியம் 3051.02 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 76,666 மக்கள் தொகையும், ஆண்டு வருமானம் ரூபாய்4,00,000 கொண்டிருந்தது. இதன் குடிமக்களில் பெரும்பான்மையாக பில் மலைவாழ் பழங்குடியினர் ஆவார்.[2] இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு தொகு

இராஜபுத்திர குல சிசோடியா வம்சத்தினரால் 836-ஆம் ஆண்டில் பர்வானி இராச்சியம் நிறுவப்பட்டது. தில்லி சுல்தான்களால் சிறை பிடிக்கப்பட்ட பர்வானி அரச குடும்பத்தினர் கட்டாய இசுலாமிய மதம் மாற்றம் செய்யப்பட்ட போதும், மறைமுக இந்துக்களாக வாழ்ந்தனர். பின்னர் பர்வானி அரச குடும்பத்தினர் மீண்டும் இந்துக்களாக மதம் மாறினர். 17-ஆம் நூற்றாண்டில் மராத்தியப் பேரரசிற்கு எதிரான போரில் பர்வானி இராச்சியத்தினர் பல பகுதிகளை இழந்தனர்.[3]மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பர்வானி இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் கீழ் போபாவார் முகமையின் கீழ் இருந்தது.[4]பர்வானி சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராச்சியம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.[5]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Imperial Gazetteer of India
  2. "Imperial Gazetteer2 of India, Volume 8, page 147 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library".
  3. https://dsal.uchicago.edu/reference/gazetteer/text.html?objectid=DS405.1.I34_V07_096.gif
  4. Bhopawar Agency
  5. Genealogy of the ruling chiefs of Barwani
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வானி_சமஸ்தானம்&oldid=3375037" இலிருந்து மீள்விக்கப்பட்டது