பார்வததேசம்

பார்வததேசம் இமயமலையின் கிழக்கு முனைக்கு தெற்கிலும், ஆரட்டதேசத்திற்கு கிழக்கில் பராக்சோதிசதேத்திற்கு மேற்கில் இமயமலையின் அடிவாரத்தில் பூமியிலும், இமயமலையின் மலை மேலும் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம் தொகு

இந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத பனி, மழை, குளிர் இவைகள் அதிகமாக இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள் தொகு

இந்த தேசத்தில் தொடர்குன்றுகளும், பெரிய மலைகளும், அடர்ந்த காடுகளும், சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் உண்டு.

நதிகள் தொகு

இந்த பார்வததேசத்தில் இமயமலையிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி ஓடுகிற நதி மகாவேகா இந்த தேசத்தை செழிக்க வைத்து கிழக்கு நோக்கி ஓடி கொல்கத்தா நகருக்கு அருகில் கங்கையுடன் இணைகிறது.

கருவி நூல் தொகு

சான்றடைவு தொகு

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 203 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வததேசம்&oldid=2076853" இலிருந்து மீள்விக்கப்பட்டது