பாலையவனம் பாளையம்
'பாலையவனம் பாளையம்' என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், "அறந்தாங்கி" பகுதி 'பாலையூர்' என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது "வணங்கமுடி பண்டாரத்தார்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது.[1]

வரலாறு தொகு
1879 ஆம் ஆண்டு, இராமசந்திர விஜய அருணாசல வணங்காமுடிப் பண்டாரத்தார் கீழ் 52 கிராமங்கள் இருந்தன (18954 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 8767 ரூபாய் 12 அணா ஆகும்.[2][3]
சுனையக்காட்டில் கிணற்று (சுனை) ஒன்றினை, விஜய அருணாசல வணங்காமுடி பண்டாரத்தார் பிரதிஷ்டை செய்தார் என்று, கி. பி. 1687 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.[1]
சிற்றம்பல கவிராயர் அவர்கள், ஜமீன் ஆண்டவராய வணங்காமுடி பண்டாரத்தின் மீது பாடல்கள் பாடி பரிசில்கள் பெற்றுள்ளார்.[1]
இவர்களின் மிகவும் பழமையான அரண்மனை முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.[4] இவர்கள் அறந்தாங்கி தொண்டைமான் வம்சாவளியில் வந்தவர்கள் ஆவார்கள்[5].
ஜமீன் அ. துரையரசன் வணங்காமுடி பண்டாரத்தார் அவர்கள் பாலைவனம் ஜமீன்களில் இறுதியானவர்.
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 1.2 "பழங்காலக் கல்வெட்டுகள்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/jun/29/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-372340.html.
- ↑ கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. பக். 91. https://archive.org/details/kallar-sarithiram/page/n99/mode/1up.
- ↑ மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு. 1976. பக். 319. https://archive.org/details/THFmuvendharPinnA/mode/1up.
- ↑ "ஜமீன் அரண்மனை". தமிழ்அகம். https://tamilakam24x7.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA/.
- ↑ MANUAL OF PUDUKKOTTAI STATE VOL II. 2002. பக். 721. https://archive.org/details/dli.chennai.145/mode/2up?q=.