பாவண்ணன் (1988)

பாவண்ணன் எனும் பாஸ்கரன் (பிறப்பு: அக்டோபர் 20, 1988) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இதுவரை 13 சிறுகதைத் தொகுதிகள், 3 நாவல்கள், 3 குறுநாவல்கள், கட்டுரைத் தொகுப்பு, மொழிபெயர்ப்பு நூல்கள் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். நாவலுக்காக தமிழ்நாடு அரசின் விருதினையும், சிறுகதைக்காக இலக்கியச் சிந்தனைப் பரிசையும், சிறந்த மொழிபெயர்ப்புக்காகச் சாகித்ய அகாதமி விருதினையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய "பச்சைக்கிளியே பறந்து வா" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவண்ணன்_(1988)&oldid=3614106" இலிருந்து மீள்விக்கப்பட்டது