பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ

பிடெலிசு லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ (Fidelis Lionel Emmanuel Fernando, பிறப்பு: மே 20, 1948)[1] இலங்கைக் கத்தோலிக்க குரு ஆவார். இவர் மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயராக 2017 டிசம்பர் 30 இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதி வணக்கத்துக்குரிய
பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ
மன்னார் ஆயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம்கொழும்பு
மறைமாவட்டம்மன்னார்
ஆட்சி துவக்கம்திசம்பர் 30, 2017
முன்னிருந்தவர்கிங்ஸ்லி சுவாம்பிள்ளை (பரிபாலகர்)
பிற தகவல்கள்
பிறப்பு20 மே 1948 (1948-05-20) (அகவை 75)
யாழ்ப்பாணம், இலங்கை
குடியுரிமைஇலங்கைத் தமிழர்
இல்லம்மன்னார்

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

பிடெலிசு பெர்னாண்டோ யாழ்ப்பாணத்தில் 1948 மே 20 இல் பிறந்தார். இவரது பெற்றோர் தமிழ்நாடு வேம்பார் எனும் ஊரைச் சேர்ந்தவர்கள். இவருடன் உடன்பிறந்தவர்களில் இருவர் குருவானவர்களும், இருவர் கன்னித்துறவிகளும் ஆவர். கொழும்பில் புனித பெனடிக்சு கல்லூரியில் கல்வி கற்ற இவர் கொழும்பு புனித அலோசியசு மடப்பள்ளியில் சேர்ந்தார். பின்னர் கண்டி அம்பிட்டி தேசிய மடப்பள்ளியில் சேர்ந்து மெய்யியல் கற்றார். பின்னர் இவர் உயர் கல்விக்காக ரோம் சென்று அங்குள்ள அர்பேனியானா பல்கலைக்கழகத்தில் அறமுறை இறையியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] 1973 சனவரி 6 இல் திருத்தந்தை ஆறாம் பவுல் இவரைத் திருநிலைப்படுத்தினார். சில ஆண்டுகள் குருவானவராகப் பணியாற்றிய பின்னர் வாசிங்டன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் இறையியலில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.[2] இலங்கை தேசிய மடப்பள்ளியில் இறையியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். 2011 நவம்பர் 28 இல் கொழும்பு மறைமாவட்டத்தின் தெற்கிற்கான துணை ஆயராக நியமிக்கப்பட்டார்.[3]

மன்னார் ஆயர் தொகு

மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய இராயப்பு யோசப் உடல்நலக் குறைவினால் விருப்ப ஓய்வுபெற்றதையடுத்து, 2016 சனவரி 14 இல் ஓய்வுபெற்ற ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மன்னாரின் பரிபாலகராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார். 2017 நவம்பர் 21 இல் திருத்தந்தை பிரான்சிசு கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக இருந்த பிடெலிசு பெர்னாண்டோவை மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்தார்.[4] 2017 டிசம்பர் 30 அன்று பிடெலிசு பெர்னாண்டோ இப்பொறுப்பை அதிகாரபூர்வமாகக் கையேற்றார்.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. Bishop Fidelis Lionel Emmanuel Fernando - Catholic Hierarchy
  2. 2.0 2.1 "Rev. Dr. Emmanuel Fernando appointed Mannar Bishop". டெய்லி நியூசு. 24-11-2017. http://www.dailynews.lk/2017/11/24/local/135483/rev-dr-emmanuel-fernando-appointed-mannar-bishop. பார்த்த நாள்: 31-12-2017. 
  3. "Sri Lanka: Bp. Fidelis L. E. Fernando new Bishop of Mannar". Radio Vaticana. 22-11-2017. http://en.radiovaticana.va/news/2017/11/22/sri_lanka_bp_fidelis_l_e_fernando_new__bishop_of_mannar/1350522. பார்த்த நாள்: 31-12-2017. 
  4. "மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பிடெலிஸ் லயனல் இமானுவெல் பெர்னான்டோ ஆண்டகை நியமனம்:". 23-11-2017. http://varudal.com/2017/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/. பார்த்த நாள்: 31-12-2017. 
  5. "மன்னார் மறைமாவட்டத்திற்கு மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிசு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ". 30-12-2017. http://www.newmannar.lk/2017/12/newbishop.html. பார்த்த நாள்: 31-12-2017. 
  6. "பல ஆயிரக்கணக்கான மக்கள் சூழ புதிய ஆயர் வரவேற்பு". பதிவு.கொம். 31-12-2017. http://www.pathivu.com/?p=146164. பார்த்த நாள்: 31-12-2017.